வாரிசு அரசுகளை கைவிடுகிற போது ராகுலை இளவரசன் என்று அழைப்பதை நிறுத்துவேன்: மோடி Modi says Stop calling prince Rahul to abandoned heir governments
பாட்னா, அக்.27-
பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இன்று பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளார் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுவதற்கு முன்னர் காந்தி மைதானம் உள்பட 6 இடங்களில் குண்டு வெடித்தன. இந்த குண்டு வெடிப்பில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி கூறியதாவது:-
எனக்கு வறுமையை பற்றி நன்றாக தெரியும். ஆனால், காங்கிரஸ் தலைவர்களுக்கு வறுமையை சந்தித்தது கிடையாது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஏழைகள், விவசாயிகளுக்கு ஒன்றும் செய்து இருக்கவில்லை. அவர்கள் ஏழைகளை ஏமாற்றி வருகிறார்கள். அவர்கள் மக்களுக்கு கொடுத்த 80 விழுக்காடு வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவே இல்லை.
பரம்பரை அரசியலை காங்கிரஸ் விடுகிறபோது, நான் கட்சியின் தலைவரை இளவரசன் (ஷாஸதா) என்று அழைப்பதை நிறுத்துவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
...
shared via
No comments:
Post a Comment