According to the social networking giant’s top India trends of 2013, Shri Narendra Modi tops the list of the most mentioned person of the year, followed by cricketing legend Sachin Tendulkar, Apple iconic device iPhone 5s, RBI governor Shri Raghuram Rajan and India’s Mars Mission ‘Mangalyaan’. The popularity index released today by the social networking giant, takes a look at the people, moments and places that mattered the most on Facebook in India in 2013. A popular icon who promises inspiring leadership, Shri Modi successfully emerged as the most talked about person in 2013, having been the most discussed in conversations happening all over Facebook. This recent acknowledgement of his awe-inspiring virtual presence is proof enough of Shri Modi’s rising popularity, which transcends across the barriers of space and time – from present to the future, and from the real to the virtual
Tuesday, December 10, 2013
Shri Narendra Modi has been the most talked about person on Facebook, in India, for the year 2013
According to the social networking giant’s top India trends of 2013, Shri Narendra Modi tops the list of the most mentioned person of the year, followed by cricketing legend Sachin Tendulkar, Apple iconic device iPhone 5s, RBI governor Shri Raghuram Rajan and India’s Mars Mission ‘Mangalyaan’. The popularity index released today by the social networking giant, takes a look at the people, moments and places that mattered the most on Facebook in India in 2013. A popular icon who promises inspiring leadership, Shri Modi successfully emerged as the most talked about person in 2013, having been the most discussed in conversations happening all over Facebook. This recent acknowledgement of his awe-inspiring virtual presence is proof enough of Shri Modi’s rising popularity, which transcends across the barriers of space and time – from present to the future, and from the real to the virtual
Sunday, October 27, 2013
ஐ.எஸ்.ஐயுடன் முஸ்லிம்கள் தொடர்பு: ராகுலுக்கு தகவல் கொடுத்தவர் ராஜஸ்தான் போலீஸ் அதிகாரி மோடி தகவல் muslim connect with isi rajasthan police officer infirm to rahul
ஐ.எஸ்.ஐயுடன் முஸ்லிம்கள் தொடர்பு: ராகுலுக்கு தகவல் கொடுத்தவர் ராஜஸ்தான் போலீஸ் அதிகாரி மோடி தகவல் muslim connect with isi rajasthan police officer infirm to rahul
ஜெய்ப்பூர், அக். 27–
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சு மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
மதக்கலவரம் நடந்த உத்திரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் முஸ்லிம் இளைஞர்களை பாகிஸ்தான் உளவு அமைப்பினர் (ஐ.எஸ்.ஐ) சந்தித்து தீவிரவாத செயல்களில் ஈடுபடுமாறு துண்டியதாக ராகுல்காந்தி பேசினார்.
அவரது இந்த பேச்சுக்கு இஸ்லாமிய அமைப்புகள், பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. அவருக்கு எதிராக உத்தரபிரதேசத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷனும் அவர் பேசிய பேச்சின் சி.டி. பதிவு காட்சிகளை பார்க்கிறார்கள்.
இந்த நிலையில் ஐ.எஸ்.ஐ.யுடன் முஸ்லிம் இளைஞர்களுக்கு தொடர்பு இருந்த தகவலை ராகுல்காந்திக்கு ராஜஸ்தான் போலீஸ் அதிகாரி ஒருவர்தான் தெரிவித்தார் என்று நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளரான அவர் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடந்த கூட்டத்தில் இது தொடர்பாக பேசியதாவது:–
முசாபர்நகர் முஸ்லிம் இளைஞர்களுக்கு, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்பினருடன் தொடர்பு இருப்பதாக ராகுல்காந்தி தெரிவித்தார். அவருக்கு இந்த தகவலை கொடுத்தது ராஜஸ்தான் போலீஸ் அதிகாரி ஆவார். அவர் யார் என்று எனக்கு தெரியும். சட்டமன்ற தேர்தலில் அவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புகிறார். இந்த தகவலை வைத்துதான் அவர் தனது பொதுக்கூட்டத்தில் தெரிவித்தார்.
இந்த பேச்சு மூலம் கட்சிக்கு பலன் ஏற்படும் என்று அவர் நினைத்துள்ளார். குடும்ப சீரியலில் நன்றாக பேசுவதாக இளவரசர் கருதுகிறார். தன்னை மதசார்பற்றவர் என கூறுகிறார். ஆனால் மதக்கலவரங்களை தூண்டும் வகையில் பேசுகிறார்.
அரசியல் லாபத்துக்காக சி.பி.ஐ.யை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது.
பா.ஜனதா உள்பட எதிர்கட்சியினர் மீது பல வழக்குகள் போடுவதற்காகவே சி.பி.ஐ.யை பயன்படுத்துகிறது.
இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.
...
shared via
வாரிசு அரசுகளை கைவிடுகிற போது ராகுலை இளவரசன் என்று அழைப்பதை நிறுத்துவேன்: மோடி Modi says Stop calling prince Rahul to abandoned heir governments
வாரிசு அரசுகளை கைவிடுகிற போது ராகுலை இளவரசன் என்று அழைப்பதை நிறுத்துவேன்: மோடி Modi says Stop calling prince Rahul to abandoned heir governments
பாட்னா, அக்.27-
பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இன்று பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளார் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுவதற்கு முன்னர் காந்தி மைதானம் உள்பட 6 இடங்களில் குண்டு வெடித்தன. இந்த குண்டு வெடிப்பில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி கூறியதாவது:-
எனக்கு வறுமையை பற்றி நன்றாக தெரியும். ஆனால், காங்கிரஸ் தலைவர்களுக்கு வறுமையை சந்தித்தது கிடையாது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஏழைகள், விவசாயிகளுக்கு ஒன்றும் செய்து இருக்கவில்லை. அவர்கள் ஏழைகளை ஏமாற்றி வருகிறார்கள். அவர்கள் மக்களுக்கு கொடுத்த 80 விழுக்காடு வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவே இல்லை.
பரம்பரை அரசியலை காங்கிரஸ் விடுகிறபோது, நான் கட்சியின் தலைவரை இளவரசன் (ஷாஸதா) என்று அழைப்பதை நிறுத்துவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
...
shared via
நிதிஷ் ஒரு சந்தர்ப்பவாதி: பாட்னா பொதுக்கூட்டத்தில் மோடி குற்றச்சாட்டு Narendra Modi takes potshots at Nitish
நிதிஷ் ஒரு சந்தர்ப்பவாதி: பாட்னா பொதுக்கூட்டத்தில் மோடி குற்றச்சாட்டு Narendra Modi takes potshots at Nitish
பாட்னா, அக். 27-
பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று முதல் முறையாக பீகார் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட அக்கூட்டத்தில் பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் குறித்து மோடி கூறியதாவது:-
உனது நண்பர் பாரதீய ஜனதாவை விட்டு ஏன் சென்றார் என்று மக்கள் என்னை கேட்கிறார்கள். குரு ஜெயப்பிரகாஷ் நாராயணன், சமூக சீர்திருத்தவாதி ராம் மனோகர் லோஹியாவை யார் முதுகில் குத்துகிறார்களோ, அவர்கள்தான் நீண்ட கால நண்பர்களாகிய பாரதீய ஜனதாவை விட்டு எளிதில் செல்ல முடியும்.
முதல் மந்திரி நிதிஷ் குமார் ஒரு சந்தர்ப்பவாதி. அவர் பீகார் மக்களை காட்டிக்கொடுத்து விட்டார். இவர்கள் காங்கிரசுடன் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
1999-ம் ஆண்டு அதிகப்படியான எம்.எல்.ஏ.-க்கள் எங்களுக்கு இருந்தும் நிதிஷ்குமார் தலைமையை ஏற்க எங்களது கட்சி முதலமைச்சர் பதவியையே தியாகம் செய்தது. அப்போது நிதிஷ் குமாரின் தலைமையை பாரதீய ஜனதா ஏற்றது.
பீகார் மக்களின் நலனுக்காவும் தேசிய ஜனநாயக கூட்டணிக்காகவும் பல்வேறு தியாகங்களை செய்து ஐக்கிய ஜனதா தளத்துடன் பாரதீய ஜனதா இணைந்தே செயல்பட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
...
shared via
Saturday, October 26, 2013
விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: ராஜஸ்தான் கூட்டத்தில் மோடி தாக்கு Central Government did not take steps to control price rise Modi talk in Rajasthan
விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: ராஜஸ்தான் கூட்டத்தில் மோடி தாக்கு Central Government did not take steps to control price rise Modi talk in Rajasthan
உதய்பூர், அக். 26-
ராஜஸ்தான் மாநிலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் உதய்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. வாஜ்பாய் ஆட்சியின்போது டீசல் விலை 22 ரூபாயாக இருந்தது. இப்போது 60 ரூபாயைத் தாண்டிவிட்டது. 100 நாட்களில் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதாக கூறினார்கள். பணவீக்கம் விஷயத்தில் நடந்தது என்ன? என்பதை அவர்கள் தெரிவிக்க வேண்டும்.
வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வெங்காய உற்பத்தியில் வெறும் 5 சதவீதம் தான் பற்றாக்குறை உள்ளது. ஆனால் விலையோ 1500 சதவீதம் உயர்ந்திருக்கிறது. விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
காங்கிரஸ் கட்சி, மக்கள் நலத்திட்டங்களைப் பற்றி பேசுவதற்குப் பதிலாக, குடும்ப நாடங்களை ஓட்டிக்கொண்டிருக்கிறது. குடும்ப நாடகங்கள் இந்திய குடும்பங்களில் மிகவும் பிரபலம்.
காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக வழக்குகள் உள்ளன. ஆனால் அந்த விஷயத்தில் சி.பி.ஐ. மவுனமாக இருக்கிறது. ஆனால் பா.ஜனதா கட்சியின் வசுந்தரா ராஜே, ராமன் சிங், சிவராஜ் சிங் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தபோது சி.பி.ஐ. இப்படி மவுனமாக இருக்கவில்லை. அரசியல் நோக்கங்களுக்காக சி.பி.ஐ. பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
...
shared via
திருட்டு பைக்கில் ராஜஸ்தானை சுற்றி வந்த ராகுல் காந்தி: மோடி கடும் தாக்கு modi alleges rahul strolled on stolen bike in rajasthan
திருட்டு பைக்கில் ராஜஸ்தானை சுற்றி வந்த ராகுல் காந்தி: மோடி கடும் தாக்கு modi alleges rahul strolled on stolen bike in rajasthan
ஜெய்பூர், அக். 27-
பிரதமர் பதவிக்கான பா.ஜ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி நாடெங்கிலும் சுற்றுப் பயணம் செய்து மக்களின் ஆதரவை திரட்டி வருகிறார்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மோடி பேசியதாவது:-
ராஜஸ்தானின் மந்திரியாக பதவி வகித்த பாபுலால் நாகர் மீதே கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. எந்த பெண்ணாவது தனியாக சென்று ராஜஸ்தான் மந்திரிகளை சந்தித்து தங்களின் புகார்களை அளிக்க முன்வருவார்களா? பெண்களின் கண்ணியம் இங்கு மதிக்கப்படுவது இல்லை.
முதல் மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு ராஜஸ்தான் மாநிலத்தையே அழித்து விட்டது. இந்த காங்கிரஸ் அரசை மாநிலத்தை (ராஜஸ்தான்) விட்டே தூக்கி எறிந்தால் இந்தியாவின் முகமாக ராஜஸ்தான் மாறிவிடும்.
ராகுல் காந்தி தனது பாட்டி மற்றும் அப்பா படுகொலை செய்யப்பட்டதாக கதைகளை சொல்லி குடும்ப சீரியல்களை பொதுகூட்டக் மேடைகளில் நடத்தி வருகிறார்.
கோபால்கர் கலவரத்தில் 10 உயிர்கள் பலியானதால் தனது கட்சியின் முதல் மந்திரி வேட்பாளர் அசோக் கெலாட்டை கூட நம்பாமல் யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக ராகுல் காந்தி ஒரு பைக்கின் பின்னால் அமர்ந்தபடி கோபால்கர் பகுதியை சுற்றி வந்தார்.
அந்த பைக்கை ஓட்டியது யார்? அந்த பைக் யாருடையது? என்பது உங்களுக்கு தெரியும். அது காணாமல் போனதாக கூறப்பட்ட ஒரு திருட்டு பைக்.
தேர்தல் நெருங்கி விட்டதால் பா.ஜ.க. தலைவர்கள் குலாப் ரத்தோர் ஆகியோர் மீது சி.பி.ஐ.யை ஏவிவிட்ட காங்கிரஸ் கட்சியின் ராஜஸ்தான் மாநில ஆட்சி தற்போது முன்னாள் முதல் மந்திரி வசுந்தரா ராஜேவையும் பழி வாங்க நினைக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
...
shared via
ஐ.எஸ்.ஐ.யிடம் தொடர்பில் உள்ள முஸ்லிம்கள் பெயரை வெளியிட தயாரா? ராகுல் காந்திக்கு மோடி சவால் Modi challenge to Rahul ready to reveal the names of Muslim people involved to ISI
ஐ.எஸ்.ஐ.யிடம் தொடர்பில் உள்ள முஸ்லிம்கள் பெயரை வெளியிட தயாரா? ராகுல் காந்திக்கு மோடி சவால் Modi challenge to Rahul ready to reveal the names of Muslim people involved to ISI
ஜான்சி, அக். 26–
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்திக்கு சரமாரியாக கேள்வி எழுப்பி சவால் விட்டார். அவரது பேச்சு விவரம் வருமாறு:–
ரெயில் நிலையத்தில் டீ விற்று வாழ்க்கையை தொடங்கிய என்னை பிரதமர் வேட்பாளராக பா.ஜ.க. அறிவித்துள்ளது. டெல்லியில் என்னை அமர வைத்தால் நமது நாட்டின் கருவூலத்துக்கு நான் காவலாளியாக இருப்பேன்.
காங்கிரஸ் ஆட்சிக்கு நீங்கள் 60 ஆண்டுகள் வாய்ப்பு கொடுத்தீர்கள். இதனால் அவர்கள் தங்களை மன்னர்கள் போல கருதி கொண்டிருக்கிறார்கள்.
பா.ஜ.க.வுக்கு 60 மாதங்கள் வாய்ப்பு தாருங்கள். இந்திய நாட்டை உலகமே வியக்கும் வகையில் மாற்றிக் காட்ட முடியும். மக்களின் கண்ணீருக்கும், கவலைகளுக்கும் பதில் சொல்லும் அரசாக பா.ஜ.க. அரசு திகழும்.
காங்கிரசின் இளவரசராக வலம் வருபவர் (ராகுல்) இந்தூர் பொதுக் கூட்டத்தில் பேசியதை நான் படித்தேன். முசாபர் நகரில் உள்ள முஸ்லிம் இளைஞர்கள் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு வைத்திருப்பதாக அந்த இளவரசர் கூறி இருக்கிறார்.
அவருக்கு இந்த தகவலை உளவுத்துறை அதிகாரி சொன்னாராம். உளவு துறை அதிகாரி, அந்த தகவலை அந்த இளவரசரிடம் (ராகுல்) ஏன் சொன்னார் என்று தெரியவில்லை.
இளவரசர் சாதாரண எம்.பி. பதவி தான் வகித்து வருகிறார். அவரிடம் உளவுத்துறை அதிகாரி தகவலை பகிர்ந்து கொண்டது பற்றி விசாரணை நடத்த வேண்டும்.
முசாபர் நகர் முஸ்லிம் வாலிபர்கள் ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு வைத்திருப்பதாக கூறும் காங்கிரஸ் இளவரசர் அந்த வாலிபர்களின் பெயர்களை வெளியிட வேண்டும். இதற்கு அவர் தயாரா? என்று சவால் விடுகிறேன்.
ஒரு வேளை அவர் அந்த முஸ்லிம் வாலிபர்களின் பெயரை வெளியிடா விட்டால், ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் அவர் அவமதிப்பதாகத்தான் அர்த்தம். இதற்காக அந்த இளவரசர் நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்.
சில தினங்களுக்கு முன்பு அந்த இளவரசர் தன் பாட்டியை சுட்டுக் கொன்ற சோகக்கதையை சொல்லி அழுது இருக்கிறார். நான் இங்கு அழுவதற்கு வரவில்லை. உங்கள் கண்ணீரை துடைக்கவே வந்திருக்கிறேன்.
பாட்டியை கொன்றவர்கள் மீது 15 ஆண்டுகள் வரை கோபத்துடன் இருந்ததாக இளவரசர் கூறி இருக்கிறார். அந்த சம்பவத்துக்காக ஆயிரக்கணக்கான சீக்கியர்களை உங்கள் கட்சி கொன்றதே, அதற்காக இதுவரை ஒருவருக்கு கூட தண்டனை அளிக்கப்படவில்லையே.
கொல்லப்பட்ட சீக்கியர்களுக்காக நீங்கள் வருத்தமோ, கோபமோபட்டதுண்டா? காயம் மீது உப்பு தடவும் வேலையை இளவரசர் கைவிட வேண்டும்.
பந்தல்கண்ட் விவசாயிகளுக்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதியை மத்திய பிரதேச முதல்–மந்திரி சிவராஜ்சிங் சவுகான் சரியாக பயன்படுத்தி இருக்கிறார். ஆனால் உத்தரபிரதேச அரசியல்வாதிகள் அந்த பணத்தை கொள்ளையடித்து தங்கள் பைகளில் போட்டு விட்டனர்.
காங்கிரஸ் இளவரசர் ஏழைகளின் வீடுகளுக்கு அடிக்கடி செல்கிறார். அவர் கட்சி கொடுத்துள்ள பரிசு இந்த ஏழ்மைதான்.
உத்தரபிரதேசத்தில் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் நடமாடுவதாக காங்கிரஸ் இளவரசர் சொல்கிறார். அப்படியானால் அவர் கட்சி என்ன செய்து கொண்டிருக்கிறது. இதற்கு காங்கிரஸ் விளக்கம் அளிக்க வேண்டும்.
ரகசியங்களை வெளியில் சொல்ல மாட்டேன் என்று பதவி ஏற்கும் போது உறுதி மொழி கொடுப்பார்கள். இதுவெல்லாம் காங்கிரஸ் இளவரசருக்கு தெரியுமா? அவர் ரகசிய காப்பு உறுதிமொழி எடுக்கவில்லையா?
உத்தரபிரதேசத்தில் ஏராளமான வளம் உள்ளது. நீங்கள் நினைத்தால் ஒட்டு மொத்த இந்தியாவின் வறுமையை ஒழிக்க முடியும்.
காங்கிரஸ் அதை செய்யாமல் பேக்கேஜ் என்ற பெயரில் திட்டங்களை அறிவிக்கிறது. காங்கிரசை நீங்கள் பேக்கிங் செய்யும் காலம் வந்து விட்டது.
இவ்வாறு மோடி பேசினார்.
...
shared via
Friday, October 25, 2013
நாட்டின் கஜானாவில் யாரும் கைவைக்க முடியாதபடி காவல் காப்பேன்: மோடி பேச்சு modi says will safe guard countrys treassury as watch man
நாட்டின் கஜானாவில் யாரும் கைவைக்க முடியாதபடி காவல் காப்பேன்: மோடி பேச்சு modi says will safe guard countrys treassury as watch man
லக்னோ, அக். 26-
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக் கூட்டத்தில் குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி பேசியதாவது:-
பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையிலும் ஊழலுக்கு எதிராக என்ன செய்ய போகிறோம்? என்று பேச காங்கிரஸ் கட்சி மறுத்து வருகிறது. பணவீக்கம், விலைவாசி உயர்வு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாகவும் பதில் அளிக்காமல் அவர்கள் மவுனம் சாதிக்கின்றனர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு மக்களுக்கு பதில் அளிக்க வேண்டாமா? ஆனால், தங்களை இந்த நாட்டின் ராஜாக்களாகவும் இளவரசர்களாகவும் கருதிக் கொண்டிருப்பவர்கள் பதில் அளிக்க விரும்பவில்லை.
மக்களாகிய நீங்கள் காங்கிரஸ் கட்சிக்கு 60 ஆண்டுகள் ஆட்சி செய்யும் பொறுப்பை தந்தீர்கள். எங்களுக்கு 60 மாதங்களை தாருங்கள்.
ஒரு காலத்தில் ரெயில்களில் டீ விற்ற என்னை பிரதமர் பதவிக்குரிய வேட்பாளராக பா.ஜ.க. அறிவித்துள்ளது.
என்னை நீங்கள் பிரதமராக்க வேண்டாம். இந்த நாட்டின் காவல்காரனாக (வாட்ச் மேன்) மட்டும் நியமித்தால் போதும். உங்கள் காவல்காரனாக டெல்லியில் அமர்ந்து நாட்டின் கஜானாவில் யாரும் கைவைக்க முடியாதபடி நான் காவல் காப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
...
shared via
என் பாட்டி, என் அப்பாவை கொன்றது போல என்னையும் கொல்வர்-ராகுல் They killed my grandmother, father; will kill me too: Rahul
என் பாட்டி, என் அப்பாவை கொன்றது போல என்னையும் கொல்வர்-ராகுல்
They killed my grandmother, father; will kill me too: Rahul
இப்புடி குழந்தை பலூனை உடைச்சுட்டா அழற மாதிரியா அழறது?!!!இப்படி அபிஷ்டு மாதிரியாங்க பேசறது? ஒருவேளை நீங்க பிஎம் ஆகிட்டா , எங்களுக்கு வாழ்க்கை மேலேயே விரக்தி வந்துடும்,அது தான் எங்களுக்கு வாழ்க்கையின் மீதான நம்பிக்கையே பொய்க்கும் இடம், பாத்துக்கங்க.
உங்க பாட்டி எமர்ஜென்சியில் விதைத்ததை சீக்கியரிடம் அறுத்தார் என்றால் மிகையில்லை,19 மாத கால கொடிய எமர்ஜென்சியில் நீங்கள் , உங்கள் புனித பசு பிம்பம் கொண்ட குடும்பம் எல்லாம் எத்தனை சொகுசாக இருந்திருப்பீர்கள் என யாருக்கும் சொல்ல வேண்டியதில்லை.
அதே எமர்ஜென்சி சமயத்தில் உங்கள் கைப்பாவை போலீஸார் & மிலிட்டரியால் நாடெங்கிலும் சந்தேகத்துக்கு இடமாக கைது செய்யப்பட்டு ,கோர்ட் விசாரணையே இன்றி சுட்டுக் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான நபர்கள், லாக்கப் டெத் செய்யப்பட்ட எதிர்கட்சியினர், நியாயம் கேட்ட படித்த,பாமர மக்களில் காலையில் வேலைக்கு போய் வீடு திரும்பாதோர், கட்டாய குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்ட லட்சக்கணக்கான ஆண்கள், பெண்கள், அதில் மணமே ஆகியிராத ஆண்கள், பெண்கள்,அது உங்களுக்கு மறந்துவிட்டதா?!!!
காங்கிரஸ் ஆண்ட போபாலில் விஷவாயு கசிவினால் ஒரே இரவில் தூக்கத்திலேயே மாண்டோர்கும்,சிதைக்கப்பட்ட டிஎன்ஏ உடற்கூறுகளுடன் இன்றும் மாண்டு கொண்டிருப்போர்க்கும் நீங்கள்,உங்கள் காங்கிரஸ்,என்ன நீதி செய்தீர்கள்?
இப்படி நீங்கள் செய்த அக்கிரமம் ஒன்றா இரண்டா?!!!தெய்வம் நின்று கொல்லும் என்பது சத்தியம், அப்படித் தான் எமர்ஜென்சியில் குரூர ஆட்டம் ஆடிய உங்கள் சித்தப்பா ,தன் மகன் பிறந்த 100வது நாளில் பயிற்சி விமான விபத்தில் இறந்ததும்!!! . போகும் போது கூட உடன் ஒருவரை அழைத்து போனார் புண்ணியவான். அது மறந்துவிட்டதா?!!!
இந்திரா அம்மையாரை இரண்டு சீக்கியர்கள் கொன்றனர்,அதற்கு பரிகாரமாக 8000 [டெல்லியில் மட்டும் 3000 பேர்][அரசு சொன்ன கணக்கு] சீக்கியரை ஆண் பெண்,குழந்தைகள்,பிறந்த சிசு என பேதமின்றி கொன்றார்களே உங்கள் திருத்தொண்டர்கள், அது மறந்துவிட்டதா?!!!
அந்த சீக்கியப் படுகொலைகளுக்கு சப்பை கட்டு கட்ட ஒரு பெரிய ஆல மரம் விழும் போது நிலம் அதிரவே செய்யும் என சொல்லிய பின்னர் அதற்கு பல திசைகளிலும் எதிர்ப்பு திரண்டு வரவே மன்னிப்பு கேட்டாரே உங்கள் தந்தை ராஜிவ். அது மறந்துவிட்டதா?!!!
எல்லாவற்றிற்கும் மேலாக இலங்கை ராணுவத்துக்கும் புலிகளுக்கும் மத்தியஸ்தம் செய்ய உங்கள் தந்தை ராஜீவ் காந்தி அனுப்பிய அமைதிப்படையை யாராலுமே மறக்க முடியாது, 3 வருட அட்டூழியத்துக்கு பின்னர் அமைதிப் படையை வெளியேற்ற புலிகளும்,அவர்கள் எதிரிகளான சிங்கள ராணுவமும் ஒன்றாய் இணைந்து பட்ட பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல,அது ஆப்பரேஷன் பூமாலை அல்ல ஆப்பரேஷன் சவமாலை,
உலக அரங்கில் அமைதியை திரும்ப வைத்தவர் என ராஜீவின் புகழை பரைசாற்றும் அற்ப சுயநலத்துக்காக,புற்றுநோய் கிருமி போல நாட்டையே சூறையாடிய கோரப்படை அது,ஆப்பரேஷன் பூமாலையின் அட்டூழியங்களால் மடிந்த உயிர்களுக்கும் ,வல்லுறவு செய்யப்பட்ட சகோதரிகளுக்கும்,அங்கே இன்றும் நடைபிணங்கள் போல வாழ்பவர்க்கும் நீங்கள் என்ன செய்தீர்கள் ராகுல்?,அந்த ரத்த வாடை காயும் முன்பு முள்ளிவாய்க்கால் சம்பவத்துக்கு துணை நின்று சுமார் மூன்று லட்சம் பேர் மடிய காரணமாக இருந்தீர்களே?!!!அது மறந்துவிட்டதா?!!! இன்னும் எழுதவே அயற்சியாக இருக்கிறது,ஊழல் செய்வதில் கின்னஸ் சாதனை புரிந்த கட்சி என்பது தான் உங்கள் சாதனையாக இருக்கிறது.
உங்களை விட மக்களாகிய எங்களுக்கு நிறைய வரலாறு தெரியும் ,அவை நீங்கா வடுக்களாக எங்கள் மனதில் இன்னும் உள்ளன. அதை நாங்கள் மறக்கப்போவதில்லை. உங்கள் குடும்பத்தைப் பற்றி தேடினாலே இணையம் நல்லதாக எதுவும் தருவதில்லை, அதற்கு முதலில் ஏதாவது வழி பாருங்கள்.அப்புறம் மரண பயம் கொள்ளலாம்.
அண்ணாத்தையின் மரணபயத்தை
shared via
வல்லபாய் பட்டேல் அருங்காட்சியகம் திறப்பு விழாவில் பிரதமருடன் மோடி பங்கேற்பு modi to share dias with pm
வல்லபாய் பட்டேல் அருங்காட்சியகம் திறப்பு விழாவில் பிரதமருடன் மோடி பங்கேற்பு modi to share dias with pm
அகமதாபாத், அக்.25-
சர்தார் வல்லபாய் பட்டேலின் வரலாற்றை புறக்கணித்து விட்டு நேருவில் பரம்பரை புகழை காங்கிரஸ் கட்சி பறைசாற்றி வருவதாக குஜராத் முதல் மந்திரி நரேந்தி மோடி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
இந்நிலையில், சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவாக இயங்கிவரும் அமைப்பின் சார்பில் குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் வல்லபாய் பட்டேலின் வாழ்க்கையை சித்தரிக்கும் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தின் திறப்பு விழா வரும் 29-ம் தேதி நடைபெறுகிறது.
இவ்விழாவில் தலைமை விருந்தினராக பிரதமர் மன்மோகன் சிங்கும் சிறப்பு விருந்தினராக நரேந்திர மோடியும் பங்கேற்கிறார்கள்.
இதற்கான அழைப்பிதழை விழா குழுவின் தலைவரும் மத்திய மந்திரியுமான தின்ஷா பட்டேல் மோடியை நேரில் சந்தித்து வழங்கினார். பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக தனது பெயர் அறிவிக்கப்பட்ட பின்னர் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரடியாகவும் பகிரங்கமாகவும் விமர்சித்து வரும் மோடி, நீண்ட நாட்களுக்கு பின்னர் பிரதமருடன் ஒரே மேடையை பகிர்ந்துக்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
...
shared via
முஸ்லிம் இளைஞர்கள் பற்றி ராகுல் காந்தியிடம் உளவுத்துறை கூறியது ஏன்? பா.ஜனதா கேள்வி Why Rahul Gandhi said intelligence about Muslim youth bjp question
முஸ்லிம் இளைஞர்கள் பற்றி ராகுல் காந்தியிடம் உளவுத்துறை கூறியது ஏன்? பா.ஜனதா கேள்வி Why Rahul Gandhi said intelligence about Muslim youth bjp question
புதுடெல்லி, அக். 25-
முசாபர்நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தொடர்பு கொண்டு, அவர்களை தங்கள் பக்கம் இழுக்க முயன்றதாகவும், இத்தகவலை உளவுத்துறை அதிகாரிகள் தன்னிடம் கூறியதாகவும் ராகுல் காந்தி பரபரப்பான தகவலை வெளியிட்டார்.
ராகுல் காந்தியன் இந்த கருத்துக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது முஸ்லிம்களின் தேசப்பற்று குறித்த கேள்விகளை எழுப்பியிருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
உளவுத்துறை அதிகாரிகள் ராகுல் காந்தியிடம் ஏன் இந்த தகவலை தெரிவித்தார்கள்? என்று பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
பா.ஜனதா செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், "ராகுல் ஒரு எம்.பி., நாங்களும் எம்.பி.க்கள் தான். அவர் ஒரு கட்சி நிர்வாகி, நாங்களும் கட்சி நிர்வாகிகள்தான். உளவுத்துறை எங்கள் கட்சி நிர்வாகிகளிடம் அந்த தகவலை தெரிவிக்கவில்லை. அவரிடம் மட்டும் எப்படி கூறமுடியும்? அவர் பிரதமரோ, உள்துறை மந்திரியோ அல்ல. இதுபற்றி உள்துறை மந்திரி ஷிண்டே விரிவான விளக்கம் அளிக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
...
shared via
Friday, October 18, 2013
நரேந்திரமோடி கூட்டத்துக்கு தடை இல்லை: ஐகோர்ட்டு உத்தரவு chennai high court order modi meeting not ban
நரேந்திரமோடி கூட்டத்துக்கு தடை இல்லை: ஐகோர்ட்டு உத்தரவு chennai high court order modi meeting not ban
சென்னை, அக். 18–
தமிழ்நாடு மக்கள் கட்சி தலைவர் தங்க தமிழ் வேளன் சென்னை ஐகோர்ட்டில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–
சென்னை பல்கலைக் கழகத்தில் பல்கிவாலா அறக்கட்டளை நடத்தும் ஒரு நிகழ்ச்சிக்கு பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கலந்து கொண்டு பேசுகிறார்.
குஜராத்தில் அப்பாவி முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நரேந்திரமோடி காரணமாக இருந்துள்ளார். இது தொடர்பாக அவர் மீது கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது.
அனைத்து மதங்களையும் சேர்ந்த மாணவர்கள் படிக்கும பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் இந்து மதவாதியான நரேந்திரமோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடத்த அனுமதி அளித்தால் அது மத கலவரத்தை ஏற்படுத்தும்.
கடந்த ஜூலை மாதம் இஸ்லாமிய கல்வி மையம் ஒரு நிகழ்ச்சி நடத்த அனுமதி கேட்கப்பட்டதற்கு சென்னை பல்கலைக்கழகம் மறுத்து விட்டது. எனவே மதவாதி நரேந்திரமோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடத்த வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய சென்னை போலீஸ் கமிஷனருக்கும், சென்னை பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் அவர் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மதிவாணன், கே.பி.கே. வாசுகி ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
''நரேந்திரமோடி நிகழ்ச்சி சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெறும் போது எந்த கலவரமும் ஏற்படாமல் சென்னை போலீசார் பார்த்து கொள்ள வேண்டும். எனவே மனுவை தள்ளுபடி செய்கிறேன்'' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
...
shared via
Wednesday, October 16, 2013
நரேந்திர மோடி அலையால் உ.பி., பீகாரில் காங். செல்வாக்கு இழக்கிறது Narendra modi UP Bihar Congress losing influence

நரேந்திர மோடி அலையால் உத்தரபிரதேசம், பீகாரில் காங்கிரஸ் மற்றும் முலாயம்சிங், நிதிஷ் குமாருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசம் தான் மத்தியில் ஆட்சி அமைக்கும் சக்தியாக இருந்து வருகிறது. இங்கு வெற்றி பெறும் கட்சி மத்தியில் ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்.ஆனால் உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ், பாரதீய ஜனதா, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் என 4 அணிகள் உருவான பின்பு நிலைமை மாறி விட்டது. உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் தொடர்ந்து தோற்றாலும் மற்ற மாநிலங்களில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் தொடர்ந்து ஆட்சியில் நீடித்து வருகிறது.இதே போல் பீகார் மாநிலமும் மத்தியில் ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த தேர்தலில் பாரதீய ஜனதா – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரசுக்கும், லல்லு பிரசாத் யாதவுக்கும் குறைந்த இடங்கள் கிடைத்தன.தற்போது பாரதீய ஜனதா – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி உடைந்து விட்டது. மேலும் லல்லு பிரசாத் யாதவ் ஊழல் வழக்கில் சிறை சென்று விட்டார். இதனால் அங்கும் நிலைமை மாறி விட்டது.தற்போது உத்தரபிரதேசம், பீகார் ஆகிய இரு மாநிலங்களிலும் நரேந்திரமோடி அலை வீசுவதாக எக்காமிக்ஸ் டைம்ஸ் – ஏ.சி.நீல்சன் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய இரு மாநிலங்களிலும் சேர்த்து மொத்தம் 120 எம்.பி. தொகுதிகள் உள்ளன. இப்போது தேர்தல் நடந்தால் இந்த இரு மாநிலங்களிலும் 44 தொகுதிகளை பாரதீய ஜனதா கைப்பற்றும் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசம், பீகாரில் 23 தொகுதிகளில் பாரதீய ஜனதா வெற்றி பெற்றது. தற்போது பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளதாலும், பீகாரில் நிதிஷ்குமார் ஆட்சியிலும் உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் ஆட்சியிலும் மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளதாலும் பாரதீய ஜனதாவுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்று கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.இதன் மூலம் பீகாரிலும், உத்தரபிரதேசத்திலும் பாரதீய ஜனதா அதிக இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக திகழும். உத்தரபிரதேசத்தில் மட்டும் 27 தொகுதிகள் கிடைக்கும். பீகாரில் 17 இடங்கள் கிடைக்கும் என்று கருத்துக் கணக்கில் தெரிய வந்துள்ளது.இந்த இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் செல்வாக்கு சரிந்து வருகிறது. உத்தரபிரதேசத்தில் 2009–ல் 21 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரசுக்கு தற்போது 12 தொகுதிகள்தான் கிடைக்கும்.பீகாரில் கடந்த தேர்தலில் 4 தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரசுக்கு அந்த முறை 2 தொகுதிகள்தான் கிடைக்கும் என்று கருத்து கணிப்பு கூறுகிறது.உத்தரபிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சிக்கும் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. மாயாவதி கட்சிக்கு 20 இடங்களும், முலாயம்சிங் கட்சிக்கு 16 இடங்களும் தான் கிடைக்கும் என்றும் கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.மாயாவதியை விட முலாயம்சிங் யாதவின் செல்வாக்கு கடுமையாக சரிந்துள்ளது. அந்த கட்சிக்கு தற்போது இருக்கும் 23 எம்.பி.க்களின் எண்ணிக்கை 16 ஆக குறையும்.பீகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு தற்போது இருக்கும் எம்.பி.க்களின் எண்ணிக்கை 20–ல் இருந்து 10 ஆக குறையும் என்று கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.இந்த இரு மாநிலங்களிலும் நரேந்திர மோடியா? ராகுல் காந்தியா? என்று நேரடியாக கேள்வி கேட்டால் நரேந்திர மோடிக்குத்தான் ஆதரவு என்று பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
நரேந்திரமோடி நாளை சென்னை வருகை: உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடு narendra modi tomorrow visit chennai Security

பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கடந்த மாதம் 26–ந் தேதி திருச்சியில் நடைபெற்ற பிரமாண்டமான மாநாட்டில் தமிழகத்தில் தனது பிரசாரத்தை தொடங்கினார்.குறுகிய கால இடைவெளியில் மீண்டும் நாளை நரேந்திரமோடி தமிழகம் வருகிறார். அகமதாபாத்தில் இருந்து தனி விமானத்தில் நாளை (வெள்ளி) பிற்பகல் 2.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார்.விமான நிலையத்தில் பிரமாண்டமான வரவேற்பு கொடுக்க பா.ஜனதா கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட அண்டை மாவட்டங்களில் இருந்து ஏராளமான தொண்டர்கள் மோடியை வரவேற்க வருகிறார்கள்.குறைந்தபட்சம் 20 ஆயிரம் தொண்டர்கள் விமான நிலையத்துக்கு வருவார்கள் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.விமான நிலையத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், மோகன் ராஜூலு, டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், வானதி ஸ்ரீனிவாசன், சரவண பெருமாள், கருப்பு முருகானந்தம் உள்பட முக்கிய நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து மோடியை வரவேற்கிறார்கள்.அதை தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் நரேந்திரமோடி பேசுகிறார். இதற்காக விமானநிலையம் அருகே சிறிய மேடை அமைக்கப்படுகிறது.விமான நிலைய வரவேற்பு முடிந்ததும் தியாகராய நகர் வைத்தியராமன் தெருவில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான கமலாலயம் செல்கிறார். அங்கு மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பேசுகிறார்.இதில் கலந்து கொள்வதற்காக மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் உள்பட 130 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.இந்த கூட்டத்தில் தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்துவது, பாராளுமன்ற தேர்தலை சந்திக்க வகுக்க வேண்டிய வியூகம் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.அதன்பிறகு மாலை 6 மணிக்கு சென்னை பல்கலை கழக மண்டபத்தில் நடைபெறும் விழாவுக்கு புறப்பட்டு செல்கிறார்.அங்கு நானிபல்கிவாலா அறக்கட்டளை சார்பில் நடைபெறும் விழாவில் சிறப்புரையாற்றுகிறார். அந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான அருண்ஷோசி எழுதிய நூலையும் நரேந்திரமோடி வெளியிடுகிறார். இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் சோவும் கலந்து கொண்டு பேசுகிறார்.விழா முடிந்ததும் இரவு 9 மணிக்கு தனி விமானத்தில் குஜராத் புறப்பட்டு செல்கிறார்.நரேந்திரமோடி சென்னை வருகையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். நரேந்திர மோடி செல்லும் பாதைகள் முழுக்க கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் உள்ள முக்கிய கட்டிடங்கள் அனைத்தும் போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
நரேந்திர மோடி பிரதமர் ஆனால் மகிழ்ச்சி அடைவேன்: அத்வானி Narendra Modi prime minister i ll happy advani
நரேந்திர மோடி பிரதமர் ஆனால் மகிழ்ச்சி அடைவேன்: அத்வானி Narendra Modi prime minister i ll happy advani
Tamil NewsToday,
அகமதாபாத், அக். 16-
பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை நியமித்தபோது அதனை கடுமையாக விமர்சித்தவர் அத்வானி. கட்சிப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக கூறினார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் சமாதானம் செய்ததையடுத்து தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்.
அதன்பின்னர் கடந்த மாதம் போபாலில் நடந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் மோடியும், அத்வானியும் பங்கேற்றனர். அப்போது அத்வானியின் காலைத் தொட்டு வணங்கனார் மோடி. ஆனால், அத்வானியோ அவருக்கு நேரடியாக ஆசி வழங்காமல், தனது கவனத்தை வேறு பக்கமாக திருப்பிக்கொண்டார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல் முறையாக நரேந்திர மோடியை அத்வானி பாராட்டியது தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
"மோடி பிரதமர் ஆனால் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைவேன். மோடியிடம் வழக்கத்திற்கு மாறான ஒரு தகுதி உள்ளது. அவர் எப்போதும் புதியனவற்றை செயல்படுத்துவது பற்றி சிந்தித்துக்கொண்டிருப்பார். இந்தியாவில மட்டுமல்ல உலகம் முழுவதிலும் இருந்து அவருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன" என்று அத்வானி பேசினார்.
காந்தி நகர் தொகுதி எம்.பி.யான அத்வானிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என்று பா.ஜனதா நிர்வாகிகளுக்கு மோடி அறிவுறுத்தியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரவேற்புக்குப் பின்னர், மோடியும் அத்வானியும் ஒரே காரில் விழா நடைபெறும் இடத்திற்கு வந்தனர்.
...
Show commentsOpen link
Monday, October 14, 2013
மோடி சென்னை வருகைக்கு பின் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி modi visit chennai After political changes pon radhakrishnan interview
மோடி சென்னை வருகைக்கு பின் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி modi visit chennai After political changes pon radhakrishnan interview
கன்னியாகுமரி, அக். 15–
கன்னியாகுமரியில் பாரதீய ஜனதா மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
திருச்சியில் நடந்த இளம் தாமரை மாநாட்டில் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொண்ட பின்னர் பாரதீய ஜனதா வளர்ச்சி அதிகரித்து உள்ளது. அவர் மீண்டும் வருகிற 18–ந் தேதி சென்னை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்கிறார். அதன் பிறகு தமிழக அரசியலில் ஒட்டுமொத்த மாற்றம் ஏற்படும்.
தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா கட்சியுடன் பிற கட்சிகள் தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்வது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். இந்திய மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும். வலுவான, வலிமையான பிரதமர் அமையக் கூடிய வகையில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்களித்தால்தான் மீனவர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும்.
புத்தூரில் பயங்கரவாதிகள் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினரை பாரதீய ஜனதா முழுமையான மனதுடன் பாராட்டுகிறது. ஆனால் இந்த நடவடிக்கையினை தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் பாராட்டாதது துரதிஷ்டவசமானது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து காவல் துறையினருக்கும் ஒருபடி பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் அவர்களுக்கு இருபடி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று பாரதீய ஜனதா தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.
மேலும் புத்தூர் சம்பவத்தில் மட்டுமின்றி பயங்கரவாதிகளை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தமிழக காவல்துறையில் உள்ள மற்ற அதிகாரிகள், உளவுதுறை அதிகாரிகள் அனைவருக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
இப்போது கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதிகள் எண்ணிக்கை வெறும் கடுகளவு தான். இன்னும் நிறைய பயங்கரவாதிகள் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதாக அவர்களே சொல்லி வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு பயங்கரவாதிகளை ஒடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது பாரதீய ஜனதா மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி, முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதன் ஆகியோர் உடன் இருந்தனர்.
...
shared via
Modi talks of national ambition in global address
The U.S. government may have denied a visa to him, but Gujarat Chief Minister and BJP's Prime Ministerial candidate Narendra Modi continues to address global audiences.
On Monday, Mr. Modi addressed the Global Meet of Emerging Markets Forum in Washington through video conferencing, delivering his refrain on "Effective Governance: Getting results in a democracy."
Gujarat success
It may have been a global meet, but the Chief Minister spoke largely on his national ambition through the prism of his own avowed success story of Gujarat, promising that he could do to the country what he did to his home State.
"Those in the government have to understand that people's good is the biggest agenda. Governments are guardians of people's interests," Mr. Modi said.
"Humility is important and governments must accept the collective wisdom of the people. People are ready to listen for development."
'Bitter pills swallowed for greater good'
He added: "People are ready for bitter pills. The only assurance they want is what is being done is for a greater good."
Mr. Modi said that when he took over as Chief Minister, the energy sector was in a bad shape but he called in farmers and told them they needed was more water, and not electricity.
"I appealed to them for water conservation through micro irrigation. The government and the people worked together and we did plenty of work in water harvesting," he said, adding that groundwater tables had risen in the State while expenses of farmers had come down.
The Chief Minister said Gujarat had never been an agricultural State but with the slogan of 'per drop more crop', the average annual agricultural growth rate in the State had gone up to 10 per cent.
மோடியின் கான்பூர் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள மத்திய மந்திரிக்கு அழைப்பு Jaiswal and Oppn leaders invited for Modi Kanpur rally
மோடியின் கான்பூர் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள மத்திய மந்திரிக்கு அழைப்பு Jaiswal and Oppn leaders invited for Modi Kanpur rally
கான்பூர், அக். 14-
உத்தரப் பிரதேசத்தில் உள்ள கான்பூரில் வரும் 19-ம் தேதி நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசுகிறார். பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங், மதத் தலைவர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள கான்பூர் தொகுதியின் எம்.பி.யும், மத்திய அமைச்சருமான ஸ்ரீபிரகாஷ் ஜெய்சுவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கான்பூர் மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் சுரேந்திர மைதினி கூறியதாவது:-
இக்கூட்டத்திற்கு சாதி, மதம், கட்சிகள் வேறுபாடின்றி ஒரு லட்சம் பேருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. கான்பூர் எம்.பி.யும் மத்திய மந்திரியுமான ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், சமாஜ்வாடி கட்சியின் தலைவர்கள், மந்திரிகள், எம்.எல்.ஏ.-க்கள் மற்றும் எதிர்க்கட்சியினருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.
நல்ல எண்ண அடிப்படையில் இவர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்ப வேண்டியது எங்கள் கடமை. கூட்டத்திற்கு வருவது அவர்களின் விருப்பத்தை பொறுத்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
...
shared via
சென்னையில் 18–ந் தேதி பா.ஜனதா தலைமை அலுவலகத்துக்கு மோடி வருகை narendramodi visit 18 on in chennai
சென்னையில் 18–ந் தேதி பா.ஜனதா தலைமை அலுவலகத்துக்கு மோடி வருகை narendramodi visit 18 on in chennai
சென்னை, அக். 14–
பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வருகிற 18–ந் தேதி சென்னை வருகிறார். அன்று மாலை 6 மணிக்கு சென்னை பல்கலைக்கழக மண்டபத்தில் நடைபெறும் நானிபல்கிவாலா அறக்கட்டளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
இதற்காக தனி விமானத்தில் அகமதாபாத்தில் இருந்து சென்னை வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு கொடுக்க பா.ஜனதா கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளார்கள்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட சில மாவட்டங்களில் இருந்து 10 ஆயிரம் தொண்டர்களை திரட்ட முடிவு செய்துள்ளார்கள். மதியம் 2 மணிக்கு விமான நிலையத்தில் வரவேற்பு கொடுக்கப்பட உள்ளது.
விமான நிலைய வரவேற்பு முடிந்ததும் தியாகராயநகர் வைத்தியராமன் தெருவில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான கமலாலயம் செல்கிறார். அங்கு நடை பெறும் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதில் கலந்து கொள்ளும்படி அனைத்து மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
நிர்வாகிகள் கூட்டத்தில் கூட்டணி நிலவரங்கள், கட்சி வளர்ச்சிக்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் உள்பட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக விவாதித்து முடிவெடுக்கிறார்கள்.
...
shared via
Popular Posts
-
திருச்சியில் இன்று மாலை பாரதீய ஜனதா இளைஞரணி சார்பில் இளந்தாமரை மாநாடு நடக்கிறது. இதில் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர ...
-
குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல் கூற நரேந்திரமோடி 2 ந்தேதி பீகார் செல்கிறார் Modi 2nd going to Bihar blast injured people seeing ...
-
மோடி வருகையால் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி Modi arrival tamil political changes Pon.Radhakrishnan i...
-
Shri Narendra Modi has been the most talked about person on Facebook, in India, for the year 2013 According to the social networking ...
-
விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: ராஜஸ்தான் கூட்டத்தில் மோடி தாக்கு Central Government did not take steps to con...
-
'Run for Unity' will take place on 15th December, the Punya Tithi of Sardar Vallabhbhai Patel, the Iron Man who devoted his life ...
-
திருச்சியில் நரேந்திர மோடியை சந்திக்கிறார் ரஜினி? பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல்வருமான நரேந்திர மோடியை இன்...

















