Wednesday, October 9, 2013

மோடி 18 ந்தேதி சென்னை வருகை Modi 18th visit chennai BJP administer meet

மோடி 18 ந்தேதி சென்னை வருகை: பா.ஜனதா நிர்வாகிகளை சந்திக்கிறார் Modi 18th visit chennai BJP administer meet


பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கடந்த மாதம் 26-ந்தேதி தனது தேர்தல் பிரசாரத்தை திருச்சியில் தொடங்கினார். அவரது பேச்சை கேட்க திருச்சியில் திரண்ட கூட்டம் தமிழக அரசியல் கட்சிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. குறிப்பாக இளைஞர்கள் பெருமளவு திரண்டு வந்தது அரசியல்வாதிகளை யோசிக்க வைத்துள்ளது. குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு மிகப்பெரிய செல்வாக்கு பா.ஜனதாவுக்கு இருந்ததில்லை. ஆனால் இப்போது எழுந்துள்ள மோடி அலை தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் நரேந்திர மோடி மீண்டும் வருகிற 18-ந்தேதி சென்னை வருகிறார். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெறும் நானிபல்கி வாலா அறக்கட்டளை நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான அருண்ஷோரி எழுதிய நூலையும் அவர் வெளியிடுகிறார். விழாவில் எழுத்தாளர் சோ உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள்.

தனியார் நிகழ்ச்சிக்காக மோடி வந்தாலும் அவரது வருகையை கட்சியின் எழுச்சிக்கு பயன்படுத்தி கொள்ள தமிழக பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. மாலையில் சென்னை விமான நிலையத்துக்கு வந்து சேரும் மோடியை வரவேற்க பிரமாண்டமான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வரவேற்பில் கட்சி நிர்வாகிகள் மட்டுமின்றி வடமாவட்டங்களை சேர்ந்த தொண்டர்களையும், இளைஞர்களையும் பெருமளவில் திரட்டுகிறார்கள். சிறிது நேரம் அவர்கள் மத்தியில் மோடி பேசுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

வருகிற தேர்தலில் பா.ஜனதா, பா.ம.க., ம.தி.மு.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளை ஒருங்கிணைத்து புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியும் நடந்து வருகிறது. அதே நேரத்தில் முன்னணி கட்சிகளும், பா.ஜனதாவின் திடீர் வளர்ச்சியால் கூட்டணி பற்றி முடிவெடுப்பதில் தடுமாறுகின்றன.

ஏற்காடு இடைத்தேர்தலில் தி.மு.க.வை ஆதரிக்கும்படி வெளிப்படையாகவே பா.ஜனதாவுக்கு தி.மு.க. தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழலில் பா.ஜனதாவின் நிலைப்பாடு மற்றும் கூட்டணி குறித்து தமிழக நிர்வாகிகளுடன் மோடி பேச வேண்டும் என்று தமிழக பா.ஜனதா சார்பில் கட்சி மேலிடத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மோடியும் தனது பயண திட்டத்தில் மாறுதல் செய்வது பற்றி பரிசீலித்து வருகிறார். இந்த நிர்வாகிகள் சந்திப்பின்போது பா.ஜனதா வகுக்க வேண்டிய கூட்டணி வியூகம் பற்றி ஆலோசனை நடத்துகிறார். கூட்டணி விஷயத்தில் கட்சி நிர்வாகிகளின் கருத்தையும் அவர் கேட்டறிகிறார்.

Monday, October 7, 2013

மோடியை பாராட்டிய ஆந்திர காங்கிரஸ் எம்.பி. Andhra Congress MP praising Modi

மோடியை பாராட்டிய ஆந்திர காங்கிரஸ் எம்.பி. Andhra Congress MP praising Modi

Tamil NewsYesterday,

விஜயவாடா, அக். 7-

பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை முன்னிலைப்படுத்திய நாள் முதல், காங்கிரஸ் கட்சி அவரது செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது. இந்நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ஒருவர் மோடியை பாராட்டியிருக்கிறார்.

குண்டூர் மக்களவைத் தொகுதி எம்.பி.யும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

தனி தெலுங்கானா மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு பா.ஜனதா ஆதரவு அளிக்கும் என்று காங்கிரஸ் எதிர்பார்க்கிறது.

ஆனால் தெலுங்கானா விஷயத்தில் பா.ஜனதா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, ஒன்றுபட்ட ஆந்திராவுக்கு பா.ஜனதா கட்சி ஆதரவு தெரிவித்தால், 13 மாவட்டங்கள் கொண்ட சீமாந்திரா பகுதியில் நிச்சயம் 10 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெறும்.

பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாட்டின் அனைத்து பகுதி இளைஞர்களையும் கவர்ந்துள்ளார். இளைஞர்களிடையே நேர்மறையான தாக்கத்தை மோடி ஏற்படுத்தியிருக்கிறார்.

தெலுங்கானாவை உருவாக்குவதன் மூலம் தெலுங்கு மக்களை காங்கிரஸ் பிரிக்கிறது. எனவே, ஆந்திராவை பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து எம்.பி. பதவியில் இருந்தும் காங்கிரஸ் கட்சியிலிருந்தும் விலக முடிவு செய்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
...
Show commentsOpen link

Popular Posts