சென்னையில் 18–ந் தேதி பா.ஜனதா தலைமை அலுவலகத்துக்கு மோடி வருகை narendramodi visit 18 on in chennai
சென்னை, அக். 14–
பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வருகிற 18–ந் தேதி சென்னை வருகிறார். அன்று மாலை 6 மணிக்கு சென்னை பல்கலைக்கழக மண்டபத்தில் நடைபெறும் நானிபல்கிவாலா அறக்கட்டளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
இதற்காக தனி விமானத்தில் அகமதாபாத்தில் இருந்து சென்னை வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு கொடுக்க பா.ஜனதா கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளார்கள்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட சில மாவட்டங்களில் இருந்து 10 ஆயிரம் தொண்டர்களை திரட்ட முடிவு செய்துள்ளார்கள். மதியம் 2 மணிக்கு விமான நிலையத்தில் வரவேற்பு கொடுக்கப்பட உள்ளது.
விமான நிலைய வரவேற்பு முடிந்ததும் தியாகராயநகர் வைத்தியராமன் தெருவில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான கமலாலயம் செல்கிறார். அங்கு நடை பெறும் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதில் கலந்து கொள்ளும்படி அனைத்து மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
நிர்வாகிகள் கூட்டத்தில் கூட்டணி நிலவரங்கள், கட்சி வளர்ச்சிக்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் உள்பட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக விவாதித்து முடிவெடுக்கிறார்கள்.
...
shared via
No comments:
Post a Comment