Friday, October 18, 2013

கான்பூரில் மோடி பொதுக்கூட்டத்தை நடத்தலாம்: விவசாயிகள் மனு தள்ளுபடி Narendra Modi Kanpur rally to go ahead farmers lose court case

கான்பூரில் மோடி பொதுக்கூட்டத்தை நடத்தலாம்: விவசாயிகள் மனு தள்ளுபடி Narendra Modi Kanpur rally to go ahead farmers lose court case

அலகாபாத், அக். 17-

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில், பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பங்கேற்கும் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி தலித் விவசாயிகள் அலகாபாத் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.

மோடியின் பொதுக்கூட்டத்திற்காக தங்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும், அந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடந்தால் பயிர்கள் அனைத்தும் அழிந்துபோகும் என்றும் அவர்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர். பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்குவதற்கு முன், தங்களின் சம்மதத்தை மாவட்ட நிர்வாகம் கேட்கவில்லை என்றும் கூறியிருந்தனர்.

விவசாயிகள் தாக்கல் செய்த அந்த மனுவை ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. இதனால் கான்பூர் பொதுக்கூட்டத்தை நடத்துவதில் இருந்த சிக்கல் தீர்ந்தது.

...

shared via

No comments:

Post a Comment

Popular Posts