Tuesday, December 10, 2013

Shri Narendra Modi has been the most talked about person on Facebook, in India, for the year 2013

Shri Narendra Modi has been the most talked about person on Facebook, in India, for the year 2013


According to the social networking giant’s top India trends of 2013, Shri Narendra Modi tops the list of the most mentioned person of the year, followed by cricketing legend Sachin Tendulkar, Apple iconic device iPhone 5s, RBI governor Shri Raghuram Rajan and India’s Mars Mission ‘Mangalyaan’. The popularity index released today by the social networking giant, takes a look at the people, moments and places that mattered the most on Facebook in India in 2013. A popular icon who promises inspiring leadership, Shri Modi successfully emerged as the most talked about person in 2013, having been the most discussed in conversations happening all over Facebook. This recent acknowledgement of his awe-inspiring virtual presence is proof enough of Shri Modi’s rising popularity, which transcends across the barriers of space and time – from present to the future, and from the real to the virtual

'Run for Unity'

'Run for Unity' will take place on 15th December, the Punya Tithi of Sardar Vallabhbhai Patel, the Iron Man who devoted his life to unite India.

Inviting you, your family & friends to register & join 'Run for Unity'. Let us run for unity, let us run for India




Monday, November 4, 2013

நரேந்திரமோடி பாதுகாப்புக்கு 108 கமாண்டோக்கள் ஏற்பாடு: தேசிய பாதுகாப்பு படை நடவடிக்கை Modi 108 commandos for security national security force activity

நரேந்திரமோடி பாதுகாப்புக்கு 108 கமாண்டோக்கள் ஏற்பாடு: தேசிய பாதுகாப்பு படை நடவடிக்கை Modi 108 commandos for security national security force activity

புதுடெல்லி, நவ. 4–

பா.ஜ.க. பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திரமோடி நாடெங்கும் சுற்றுப் பயணம் செய்து கூட்டங்களில் பேசி வருகிறார். பாராளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு அவர் சுமார் 100 பொதுக்கூட்டங்களில் பேச திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 20–ந் தேதி பீகார் மாநிலம் பாட்னாவில் மோடி பேசிய கூட்டத்தில் குண்டுகள் வெடித்தன. இதில் 6 பேர் பலியாகினார்கள்.

குண்டுவெடிப்பை நடத்திய இந்தியன் முஜாக்தின் தீவிரவாதிகள் போலீசில் பிடிபட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் நரேந்திர மோடி உயிருக்கு தீவிரவாதிகள் குறி வைத்திருப்பது தெரிய வந்தது.

மோடி பிரசாரம் செய்ய உள்ள மற்ற கூட்டங்களில் கைவரிசை காட்ட தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பது உறுதியானது. இதையடுத்து நரேந்திரமோடிக்கு 108 கமாண்டோ வீரர்கள் கொண்டு கருப்புபூனை படை பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த இந்த 108 கமாண்டோக்கள் 3 அடுக்காக அரண் போல் நின்று மோடிக்கு பாதுகாப்பு கொடுப்பார்கள். மோடி எங்கு சென்றாலும் இந்த கமாண்டோ வீரர்களும் உடன் செல்வார்கள்.

மோடி மீது தாக்குதல் நடத்தப்படும் பட்சத்தில் கமாண்டோ வீரர்களின் முதல் அடுக்கில் இருப்பவர்கள் மோடியை அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்கு மாற்றுவார்கள். இதற்காக அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது சுற்றில் இருக்கும் கமாண்டோக்கள் மோடியை சுற்றி நின்று பாதுகாப்பு வளையமாக இருப்பார்கள். மூன்றாவது அரணாக இருப்பவர்கள் எதிரிகளை தாக்கும் பதிலடி நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்.

மத்திய உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு படை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

...

shared via

Saturday, November 2, 2013

மோடி அமைச்சரவையில் மேலும் 6 மந்திரிகள் சேர்ப்பு 6 more MLAs inducted in modi ministry

மோடி அமைச்சரவையில் மேலும் 6 மந்திரிகள் சேர்ப்பு 6 more MLAs inducted in modi ministry

அகமதாபாத், நவ. 2-

நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் அமைச்சரவையில் நேற்று 6 எம்.எல்.ஏக்கள் மந்திரிகளாக பதவி ஏற்றனர்.

குஜராத் கவர்னர் கமலா பேனிவால் பதவி பிராமணம் செய்து வைக்க சுற்றுலா இணை மந்திரியாக ஜெயேஷ் ரடாடியா, உணவு மற்றும் பொது வினியோக துறை மந்திரியாக சத்ரசின் மோரி, சாலை மற்றும் கட்டிடங்கள் துறை மந்திரியாக ஜெயட்ரத்சின் பர்மர், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மந்திரியாக ஜஷ்வந்த்சின் பபோர், குடிசை தொழில் இணை மந்திரியாக அன்ஜர் வாசன் அஹிர், கால்நடை மற்றும் மீன்வள துறை மந்திரியாக திலிப்சின் தகோர் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இவர்களில் சுற்றுலாதுறை மந்திரியாக பொறுப்பேற்றுக் கொண்ட ஜெயேஷ் ரடாடியாவின் தந்தை வித்தல் ரடாடியா கடந்த ஆண்டு சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு கட்டணம் செலுத்த மறுத்து துப்பாக்கியை காட்டி மிரட்டிய செய்தி ஊடகங்களில் வெளியானது நினைவிருக்கலாம்.

இதை தொடர்ந்து காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட அவர் பா.ஜ.க. சார்பில் மீண்டும் போர்பந்தர் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். இவருடன் சேர்ந்து காங்கிரசை விட்டு வெளியேறிய இவரது மகன் ஜெயேஷ் ரடாடியாவும் பா.ஜ.க. சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

...

shared via

Popular Posts