மோடி அமைச்சரவையில் மேலும் 6 மந்திரிகள் சேர்ப்பு 6 more MLAs inducted in modi ministry
அகமதாபாத், நவ. 2-
நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் அமைச்சரவையில் நேற்று 6 எம்.எல்.ஏக்கள் மந்திரிகளாக பதவி ஏற்றனர்.
குஜராத் கவர்னர் கமலா பேனிவால் பதவி பிராமணம் செய்து வைக்க சுற்றுலா இணை மந்திரியாக ஜெயேஷ் ரடாடியா, உணவு மற்றும் பொது வினியோக துறை மந்திரியாக சத்ரசின் மோரி, சாலை மற்றும் கட்டிடங்கள் துறை மந்திரியாக ஜெயட்ரத்சின் பர்மர், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மந்திரியாக ஜஷ்வந்த்சின் பபோர், குடிசை தொழில் இணை மந்திரியாக அன்ஜர் வாசன் அஹிர், கால்நடை மற்றும் மீன்வள துறை மந்திரியாக திலிப்சின் தகோர் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இவர்களில் சுற்றுலாதுறை மந்திரியாக பொறுப்பேற்றுக் கொண்ட ஜெயேஷ் ரடாடியாவின் தந்தை வித்தல் ரடாடியா கடந்த ஆண்டு சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு கட்டணம் செலுத்த மறுத்து துப்பாக்கியை காட்டி மிரட்டிய செய்தி ஊடகங்களில் வெளியானது நினைவிருக்கலாம்.
இதை தொடர்ந்து காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட அவர் பா.ஜ.க. சார்பில் மீண்டும் போர்பந்தர் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். இவருடன் சேர்ந்து காங்கிரசை விட்டு வெளியேறிய இவரது மகன் ஜெயேஷ் ரடாடியாவும் பா.ஜ.க. சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.
...
shared via
No comments:
Post a Comment