முதலில் கழிவறைகளை கட்டிவிட்டு பிறகு கோயில்களை கட்டுவோம்: இளைஞர்கள் விழாவில் மோடி பேச்சு Modi wants to build toilets first temples later
Tamil NewsYesterday,
புதுடெல்லி, அக்.2-
முதலில் கழிவறைகளை கட்டிவிட்டு பிறகு கோயில்களை கட்டுவோம் என குஜராத் முதல் மந்திரியும் பா.ஜ.க.வின் பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லியில் இன்று நடைபெற்ற இளைஞர் விழாவில் நரேந்திர மோடி பேசியதாவது:-
இந்துத்துவா தலைவர் என்ற வகையில் நான் அறியப்படுகிறேன். இந்த நிலையில் மக்கள் மனதில் படிந்துள்ள என்னுடைய இமேஜ் இதை கூற அனுமதிக்காவிட்டாலும் எனது உண்மையான எண்ணத்தை துணிச்சலுடன் கூற வேண்டும் என்றால் முதலில் கழிவறைகளை கட்டுவோம்; பிறகு கோயில்களை கட்டுவோம் என்றுதான் கூறுவேன்.
நம் நாட்டில் உள்ள கிராமங்களில் இருக்கும் கோயில்களுக்கு கூட லட்சக்கணக்கான ரூபாய் செலவழிக்கப்படுகிறது. ஆனால் அங்கெல்லாம் கழிவறைகள் இல்லை. சரியான கழிவறை வசதிகள் இல்லாததால் பெண்கள் திறந்த வெளிகளை கழிப்பிடமாக ஆக்கிக்கொள்ளும் அவலம் இன்றும் நம் நாட்டில் நீடித்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
...
Show commentsOpen link
No comments:
Post a Comment