Saturday, November 2, 2013

மோடி அமைச்சரவையில் மேலும் 6 மந்திரிகள் சேர்ப்பு 6 more MLAs inducted in modi ministry

மோடி அமைச்சரவையில் மேலும் 6 மந்திரிகள் சேர்ப்பு 6 more MLAs inducted in modi ministry

அகமதாபாத், நவ. 2-

நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் அமைச்சரவையில் நேற்று 6 எம்.எல்.ஏக்கள் மந்திரிகளாக பதவி ஏற்றனர்.

குஜராத் கவர்னர் கமலா பேனிவால் பதவி பிராமணம் செய்து வைக்க சுற்றுலா இணை மந்திரியாக ஜெயேஷ் ரடாடியா, உணவு மற்றும் பொது வினியோக துறை மந்திரியாக சத்ரசின் மோரி, சாலை மற்றும் கட்டிடங்கள் துறை மந்திரியாக ஜெயட்ரத்சின் பர்மர், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மந்திரியாக ஜஷ்வந்த்சின் பபோர், குடிசை தொழில் இணை மந்திரியாக அன்ஜர் வாசன் அஹிர், கால்நடை மற்றும் மீன்வள துறை மந்திரியாக திலிப்சின் தகோர் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இவர்களில் சுற்றுலாதுறை மந்திரியாக பொறுப்பேற்றுக் கொண்ட ஜெயேஷ் ரடாடியாவின் தந்தை வித்தல் ரடாடியா கடந்த ஆண்டு சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு கட்டணம் செலுத்த மறுத்து துப்பாக்கியை காட்டி மிரட்டிய செய்தி ஊடகங்களில் வெளியானது நினைவிருக்கலாம்.

இதை தொடர்ந்து காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட அவர் பா.ஜ.க. சார்பில் மீண்டும் போர்பந்தர் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். இவருடன் சேர்ந்து காங்கிரசை விட்டு வெளியேறிய இவரது மகன் ஜெயேஷ் ரடாடியாவும் பா.ஜ.க. சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

...

shared via

Friday, November 1, 2013

சட்டசபை தேர்தல் நடக்கும் 4 மாநிலங்களில் நரேந்திர மோடிக்கு செல்வாக்கு அதிகரிப்பு narendra modi popularity coming election held 4th state

சட்டசபை தேர்தல் நடக்கும் 4 மாநிலங்களில் நரேந்திர மோடிக்கு செல்வாக்கு அதிகரிப்பு narendra modi popularity coming election held 4th state

புதுடெல்லி, நவ. 1–

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, சத்தீஸ்கர் மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த மாநிலங்களில் பாரதீய ஜனதா கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துக் கணிப்புகளில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் இந்த 4 மாநிலங்களிலும் பிரதமர் வேட்பாளர் தொடர்பான கருத்து கணிப்பை தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நடத்தியது. அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

அதில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்– மந்திரியுமான நரேந்திர மோடிக்கு 4 மாநில மக்களும் ஏகோபித்த ஆதரவை தெரிவித்திருப்பது தெரிய வந்துள்ளது. 35 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள் நரேந்திர மோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமர் பதவிக்கு வரவேண்டும் என்று கூறியுள்ளனர்.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியை 4 மாநில மக்களும் பிரதமர் பதவிக்கு விரும்பவில்லை என்பது உறுதியாகியுள்ளது. ராகுல் பிரதமராக 17 சவீதம் பேர்தான் ஆதரவு கொடுத்துள்ளனர்.

கருத்து கணிப்பு நடந்த 4 மாநிலங்களில் டெல்லியில் நரேந்திர மோடிக்கு மிக அதிகமான செல்வாக்கு இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த மாநிலத்தில் சுமார் 42 சதவீதம் பேர் மோடியை ஆதரித்துள்ளனர்.

டெல்லியில் ராகுலுக்கு வெறும் 15 சதவீதம் பேரே கை கொடுத்துள்ளனர். மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 2 மாநிலங்களிலும் ராகுலுக்கு ஓரளவு செல் வாக்கு இருக்கிறது.

பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி இருவருக்கும் மக்களிடம் செல்வாக்கு மிக, மிக குறைந்துவிட்டது தெரிய வந்துள்ளது. 4 மாநிலங்களிலும் அவர்கள் இருவருக்கும் சராசரியாக 5 சதவீத மக்களின் ஆதரவே இருக்கிறது.

எனவே வரும் பாராளுமன்ற தேர்தலில் மன்மோகன்சிங்கை பிரதமர் வேட்பாளராக நிறுத்தினால் காங்கிரஸ் நாடெங்கும் படுதோல்வியை சந்திக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரசில் வேறு எந்த மூத்த தலைவர்களுக்கும் மக்களிடம் சுத்தமாக செல்வாக்கே இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.

பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி நிலை இதை விட மோசமாக உள்ளது. 4 மாநிலங்களிலும் சராசரியாக அவருக்கு ஒரு சதவீதம் பேர்தான் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அவரை விட பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கு 4 மாநிலங்களிலும் கூடுதலாக ஒரு சதவீத மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது. சுஷ்மா சுவராஜ், நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி ஆகியோருக்கும் மக்களிடம் குறைந்த சதவீத ஆதரவே உள்ளது.

கருத்து கணிப்பு நடந்த 4 மாநிலங்களிலும் மொத்தம் 72 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 72 தொகுதிகளிலும் பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று கேட்கப்பட்டது.

அதில் பெருவாரியான மக்கள் பா.ஜ.க. பக்கம் இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் 72 தொகுதிகளில் 57 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெறும் என்று கருத்து கணிப்பு முடிவில் கூறப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் கணக்கிட்டதில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வுக்கு 180–க்கும் மேற்பட்ட இடங்கள் உறுதியாக கிடைக்கும் என்கிறார்கள். இந்த கருத்து கணிப்பு முடிவுகள் பா.ஜ.க.வினரை மிகவும் உற்சாகம் அடைய செய்துள்ளது.

...

shared via

நரேந்திர மோடிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு: உளவுத்துறை எச்சரிக்கையால் நடவடிக்கை Warning intelligence to increase security by Narendra Modi

நரேந்திர மோடிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு: உளவுத்துறை எச்சரிக்கையால் நடவடிக்கை Warning intelligence to increase security by Narendra Modi

புதுடெல்லி, நவ. 1–

பா.ஜ.க. பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குஜராத் முதல்–மந்திரி நரேந்திரமோடி நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.

பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் பேசிய பொதுக் கூட்டத்தில் இந்தியா முஜாகிதீன் தீவிரவாதிகள் குண்டு வெடிப்புகளை நடத்தியதால் 6 பேர் பலியானார்கள்.

தேசிய புலனாய்வுக் குழுவினர் நடத்திய விசாரணையில், நரேந்திரமோடியை மனித வெடிகுண்டு மூலம் கொல்ல தீவிரவாதிகள் முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது.

ஆனால், மத்திய அரசு மோடிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்க மறுத்துவிட்டது. இதனால் மோடிக்கு அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளை குஜராத் போலீசார் செய்து வந்தனர்.

இந்த நிலையில் நரேந்திர மோடிக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் அதிகரித்து இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரித்தது. நாளை அவர் பீகாருக்கு செல்லும் போது அவரை தாக்க தீவிரவாதிகள் திட்ட மிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல் கொடுத்துள்ளது.

இதைத் தொடர்ந்து நரேந்திர மோடிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மற்றும் வி.ஐ.பி.க்களுக்கு அளிக்கப்படுவது போன்று அவருக்கும் உச்சக்கட்ட பாதுகாப்பு கொடுக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அவர் எந்த ஊருக்கு சென்றாலும் இனி சிறப்பு பாதுகாப்பு படை வீரர்களின் வளையத்துக்குள்தான் இருப்பார்.

...

shared via

Wednesday, October 30, 2013

குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல் கூற நரேந்திரமோடி 2 ந்தேதி பீகார் செல்கிறார் Modi 2nd going to Bihar blast injured people seeing

குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல் கூற நரேந்திரமோடி 2 ந்தேதி பீகார் செல்கிறார் Modi 2nd going to Bihar blast injured people seeing

பாட்னா, அக்.31-

பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த 27-ந்தேதி பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கலந்து கொண்ட பொதுக்கூட்டம் நடந்தது. அப்போது நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்தனர். 82 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் நரேந்திரமோடி வருகிற 2-ந்தேதி பீகார் செல்கிறார். சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் பாட்னா செல்லும் அவர், அங்கு குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். இந்த தகவலை பீகார் மாநில பா.ஜனதா தலைவர் சுஷில்குமார் மோடி தெரிவித்துள்ளார்.

...

shared via

Tuesday, October 29, 2013

குஜராத் மாநிலம் தொடர்பான பிரச்சினைகளை பேச நேரம் ஒதுக்குவதற்கு பிரதமர் மறுத்து விட்டார்: மோடி வருத்தம் modi says PM never spared time to take gujrat issues

குஜராத் மாநிலம் தொடர்பான பிரச்சினைகளை பேச நேரம் ஒதுக்குவதற்கு பிரதமர் மறுத்து விட்டார்: மோடி வருத்தம் modi says PM never spared time to take gujrat issues

அகமதாபாத், அக்.30-

பிரதமர் மன்மோகன் சிங் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த சர்தார் வல்லபாய் பட்டேல் அருங்காட்சியகத் திறப்பு விழாவில் நேற்று பங்கேற்றார். அதே மேடையில் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல் மந்திரியுமான நரேந்திர மோடியும் கலந்துகொண்டு பேசினார்.

பின்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த மோடி, குஜராத் மாநிலம் தொடர்பான அதிமுக்கிய பிரச்சினைகள் தொடர்பாக பிரதமருடன் பேச நேரம் ஒதுக்கி தரும்படி நாங்கள் கேட்டபோது அவர் மறுத்து விட்டார் என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தின் அதிமுக்கிய பிரச்சினைகளாக நர்மதா அணையின் உயரம், வெள்ளம் மற்றும் விவசாயிகளின் நிலை தொடர்பாக பேசுவதற்கு நேரம் ஒதுக்கி தருமாறு நாங்கள் பிரதமரிடம் கேட்டோம்.

அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்ட அவர், மாநில காங்கிரஸ் அலுவலகத்தை பார்வையிட செல்வதில் தான் குறியாக இருந்தார் என்று மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டள்ளார்.

...

shared via

பட்டேல் பிரதமராயிருந்தால் நாட்டின் தலைவிதியே மாறியிருக்கும்: பிரதமர் முன்னிலையில் மோடி பரபரப்பு பேச்சு Patel should have been first PM Modi attacks

பட்டேல் பிரதமராயிருந்தால் நாட்டின் தலைவிதியே மாறியிருக்கும்: பிரதமர் முன்னிலையில் மோடி பரபரப்பு பேச்சு Patel should have been first PM Modi attacks

அகமதாபாத், அக். 29-

பிரதமர் மன்மோகன் சிங் இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த சர்தார் வல்லபாய் பட்டேல் அருங்காட்சியகத் திறப்பு விழாவில்  கலந்துகொண்டார். அதே மேடையில் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல் மந்திரியுமான நரேந்திர மோடியும் கலந்துகொண்டு பேசினார். அப்போது நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு பற்றி மறைமுகமாக அவர் சாடினார். அவர் பேசியதாவது:-

நாட்டின் முதலாவது உள்துறை மந்திரியான இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல்,  சுதந்திரம் அடைந்தபோது சிதறுண்டு கிடந்த சமஸ்தானங்களை ஒன்றாக இணைத்து இந்திய நாட்டை உருவாக்கினார். ஆனால், அந்த ஒற்றுமையும், தேசப்பற்றும் இன்று தீவிரவாதம் மற்றும் மாவோயிசம் ஆகியவற்றால் மிரட்டப்பட்டு வருகிறது.

சர்தார் வல்லபாய் பட்டேல் முதல் இந்தியப் பிரதமராக வரவில்லையே என்று ஒவ்வொரு இந்தியரும் இன்னும் வருந்துகின்றனர். ஆனால், அவர் அன்று மட்டும் பிரதமராக ஆகியிருந்தால், இன்று நாட்டின் தலைவிதியே மாறியிருந்து இருக்கும்.

தீவிரவாதத்தை கையில் எடுத்துள்ளவர்கள் அவர்களுடைய சொந்த சமுதாயங்களுக்கே மிகப்பெரும் தீங்கை இழைத்து வருகின்றனர். மேலும் நாட்டில் வன்முறையை அரங்கேற்ற இளைஞர்களை தவறாக பயன்படுத்துகின்றனர். நாட்டின் முன்னேற்றத்தை தடுக்கும் முக்கியக் காரணியாகவும் அவர்கள் மாறிக்கொண்டிருக்கின்றனர்.

நாட்டில் வன்முறையை தூண்டியவர்கள், மகாத்மா காந்தி மற்றும் சர்தார் வல்லபாய் பட்டேல் உருவாக்கிய இந்த நாட்டில் தோல்வியையே கண்டுள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார். 

...

shared via

Bangalore: Narendra Modi to address rally on November 17

In light of the serial blasts in Patna during a Modi rally in Bihar, the BJP has asked the state government of Karnataka to provide adequate security for the event to avoid any unfavourable circumstances on November 17.

Party spokesperson Prakash Javadekar says, "We hope that the state government takes necessary precaution." He further added,"We cannot forget the bomb blasts near BJP state office (in Bangalore) in April. Some members of the Coimbatore module were arrested in Puttur who planted these bombs as well as carried out targeted killings of five BJP leaders in Tamil Nadu and attacked L K Advani's rally in Coimbatore." He also confirmed that BJP would collect Rs 10 from party workers as an entry fee for the rally.

However, Javadekar did not give any direct answers o questions relating taking back B S Yeddyurappa into the party fold. He said, "I think you have to wait for few more days. Let's see."

OneIndia News

Patel should have been first PM, says Modi as he shares stage with Manmohan

On a momentous occasion, Prime Minister Manmohan Singh and BJP PM candidate Narendra Modi shared the stage at Ahmedabad on Tuesday evening at a function marking the inauguration of a museum dedicated to Sardar Vallabbhai Patel.

Gujarat Chief Minister Narendra Modi said that Sardar Patel had the credentials to lead India post Independence and that he, rather than Jawaharlal Nehru, should have become the country's first Prime Minister.

Speaking at length on Patel's ideology and policies, he said India would have had a very different fate if he had become the first PM.

Prime Minister Manmohan Singh, who took to the stage after Modi, emphatically stated that the first Home Minister of India and Nehru had a relationship based on respect and trust. He quoted the iconic leader from Gujarat, saying Patel himself had said it was his good fortune to have advised Nehru on matters of administration and this would not have been possible if there was no trust between the two men.

Emphasising that Sardar Patel was in pricinple a secular man, he said at this juncture, it was paramount for every leader and social worker to remind themselves the high ideals of secularism, tolerance and compassion for every citizen on which the modern nation of India was founded.

Modi and Manmohan appeared briefly together, exchanging words and laughs, as the two posed side by side for photographers.

Monday, October 28, 2013

'Modi alone can prevent terrorism'

CHENNAI,
Bharatiya Janata Party (BJP) State president Pon. Radhakrishnan on Monday said Gujarat Chief Minister and party's Prime Ministerial candidate Narendra Modi was alone capable of tackling terrorism effectively.

Condemning the Patna serial blasts that left five persons dead and many others injured, Mr. Radhakrishnan said the explosions were triggered at a time when the people of India were eagerly looking forward for Mr. Modi's speech at the 'Hunkar' rally.

"Only Mr. Modi as Prime Minister can take firm action and prevent such attacks. It is the responsibility of the voters to ensure that no candidate of the Congress is elected from Tamil Nadu.," he said after leading a demonstration to condemn the blasts.

The BJP would take out a 'padayatra' in December to thank the people across the State for their support to Mr. Modi. Many people from different walks of life were joining the party, he said.

Senior BJP leaders L. Ganesan, H. Raja were among those present. Earlier a one-minute silence was observed to pay homage to those who were killed in the Patna blasts.

Sunday, October 27, 2013

ஐ.எஸ்.ஐயுடன் முஸ்லிம்கள் தொடர்பு: ராகுலுக்கு தகவல் கொடுத்தவர் ராஜஸ்தான் போலீஸ் அதிகாரி மோடி தகவல் muslim connect with isi rajasthan police officer infirm to rahul

ஐ.எஸ்.ஐயுடன் முஸ்லிம்கள் தொடர்பு: ராகுலுக்கு தகவல் கொடுத்தவர் ராஜஸ்தான் போலீஸ் அதிகாரி மோடி தகவல் muslim connect with isi rajasthan police officer infirm to rahul

ஜெய்ப்பூர், அக். 27–

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சு மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

மதக்கலவரம் நடந்த உத்திரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் முஸ்லிம் இளைஞர்களை பாகிஸ்தான் உளவு அமைப்பினர் (ஐ.எஸ்.ஐ) சந்தித்து தீவிரவாத செயல்களில் ஈடுபடுமாறு துண்டியதாக ராகுல்காந்தி பேசினார்.

அவரது இந்த பேச்சுக்கு இஸ்லாமிய அமைப்புகள், பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. அவருக்கு எதிராக உத்தரபிரதேசத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷனும் அவர் பேசிய பேச்சின் சி.டி. பதிவு காட்சிகளை பார்க்கிறார்கள்.

இந்த நிலையில் ஐ.எஸ்.ஐ.யுடன் முஸ்லிம் இளைஞர்களுக்கு தொடர்பு இருந்த தகவலை ராகுல்காந்திக்கு ராஜஸ்தான் போலீஸ் அதிகாரி ஒருவர்தான் தெரிவித்தார் என்று நரேந்திர மோடி கூறியுள்ளார்.

பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளரான அவர் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடந்த கூட்டத்தில் இது தொடர்பாக பேசியதாவது:–

முசாபர்நகர் முஸ்லிம் இளைஞர்களுக்கு, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்பினருடன் தொடர்பு இருப்பதாக ராகுல்காந்தி தெரிவித்தார். அவருக்கு இந்த தகவலை கொடுத்தது ராஜஸ்தான் போலீஸ் அதிகாரி ஆவார். அவர் யார் என்று எனக்கு தெரியும். சட்டமன்ற தேர்தலில் அவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புகிறார். இந்த தகவலை வைத்துதான் அவர் தனது பொதுக்கூட்டத்தில் தெரிவித்தார்.

இந்த பேச்சு மூலம் கட்சிக்கு பலன் ஏற்படும் என்று அவர் நினைத்துள்ளார். குடும்ப சீரியலில் நன்றாக பேசுவதாக இளவரசர் கருதுகிறார். தன்னை மதசார்பற்றவர் என கூறுகிறார். ஆனால் மதக்கலவரங்களை தூண்டும் வகையில் பேசுகிறார்.

அரசியல் லாபத்துக்காக சி.பி.ஐ.யை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது.

பா.ஜனதா உள்பட எதிர்கட்சியினர் மீது பல வழக்குகள் போடுவதற்காகவே சி.பி.ஐ.யை பயன்படுத்துகிறது.

இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.

...

shared via

வாரிசு அரசுகளை கைவிடுகிற போது ராகுலை இளவரசன் என்று அழைப்பதை நிறுத்துவேன்: மோடி Modi says Stop calling prince Rahul to abandoned heir governments

வாரிசு அரசுகளை கைவிடுகிற போது ராகுலை இளவரசன் என்று அழைப்பதை நிறுத்துவேன்: மோடி Modi says Stop calling prince Rahul to abandoned heir governments

பாட்னா, அக்.27-

பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இன்று பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளார் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுவதற்கு முன்னர் காந்தி மைதானம் உள்பட 6 இடங்களில் குண்டு வெடித்தன. இந்த குண்டு வெடிப்பில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி கூறியதாவது:-

எனக்கு வறுமையை பற்றி நன்றாக தெரியும். ஆனால், காங்கிரஸ் தலைவர்களுக்கு வறுமையை சந்தித்தது கிடையாது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஏழைகள், விவசாயிகளுக்கு ஒன்றும் செய்து இருக்கவில்லை. அவர்கள் ஏழைகளை ஏமாற்றி வருகிறார்கள். அவர்கள் மக்களுக்கு கொடுத்த 80 விழுக்காடு வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவே இல்லை.

பரம்பரை அரசியலை காங்கிரஸ் விடுகிறபோது, நான் கட்சியின் தலைவரை இளவரசன் (ஷாஸதா) என்று அழைப்பதை நிறுத்துவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

...

shared via

நிதிஷ் ஒரு சந்தர்ப்பவாதி: பாட்னா பொதுக்கூட்டத்தில் மோடி குற்றச்சாட்டு Narendra Modi takes potshots at Nitish

நிதிஷ் ஒரு சந்தர்ப்பவாதி: பாட்னா பொதுக்கூட்டத்தில் மோடி குற்றச்சாட்டு Narendra Modi takes potshots at Nitish

பாட்னா, அக். 27-

பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று முதல் முறையாக பீகார் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட அக்கூட்டத்தில் பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் குறித்து மோடி கூறியதாவது:-

உனது நண்பர் பாரதீய ஜனதாவை விட்டு ஏன் சென்றார் என்று மக்கள் என்னை கேட்கிறார்கள். குரு ஜெயப்பிரகாஷ் நாராயணன், சமூக சீர்திருத்தவாதி ராம் மனோகர் லோஹியாவை யார் முதுகில் குத்துகிறார்களோ, அவர்கள்தான் நீண்ட கால நண்பர்களாகிய பாரதீய ஜனதாவை விட்டு எளிதில் செல்ல முடியும்.

முதல் மந்திரி நிதிஷ் குமார் ஒரு சந்தர்ப்பவாதி. அவர் பீகார் மக்களை காட்டிக்கொடுத்து விட்டார். இவர்கள் காங்கிரசுடன் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

1999-ம் ஆண்டு அதிகப்படியான எம்.எல்.ஏ.-க்கள் எங்களுக்கு இருந்தும் நிதிஷ்குமார் தலைமையை ஏற்க எங்களது கட்சி முதலமைச்சர் பதவியையே தியாகம் செய்தது. அப்போது நிதிஷ் குமாரின் தலைமையை பாரதீய ஜனதா ஏற்றது.

பீகார் மக்களின் நலனுக்காவும் தேசிய ஜனநாயக கூட்டணிக்காகவும் பல்வேறு தியாகங்களை செய்து ஐக்கிய ஜனதா தளத்துடன் பாரதீய ஜனதா இணைந்தே செயல்பட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

...

shared via

Popular Posts