குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல் கூற நரேந்திரமோடி 2 ந்தேதி பீகார் செல்கிறார் Modi 2nd going to Bihar blast injured people seeing
பாட்னா, அக்.31-
பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த 27-ந்தேதி பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கலந்து கொண்ட பொதுக்கூட்டம் நடந்தது. அப்போது நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்தனர். 82 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் நரேந்திரமோடி வருகிற 2-ந்தேதி பீகார் செல்கிறார். சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் பாட்னா செல்லும் அவர், அங்கு குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். இந்த தகவலை பீகார் மாநில பா.ஜனதா தலைவர் சுஷில்குமார் மோடி தெரிவித்துள்ளார்.
...
shared via
No comments:
Post a Comment