Tuesday, October 29, 2013

குஜராத் மாநிலம் தொடர்பான பிரச்சினைகளை பேச நேரம் ஒதுக்குவதற்கு பிரதமர் மறுத்து விட்டார்: மோடி வருத்தம் modi says PM never spared time to take gujrat issues

குஜராத் மாநிலம் தொடர்பான பிரச்சினைகளை பேச நேரம் ஒதுக்குவதற்கு பிரதமர் மறுத்து விட்டார்: மோடி வருத்தம் modi says PM never spared time to take gujrat issues

அகமதாபாத், அக்.30-

பிரதமர் மன்மோகன் சிங் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த சர்தார் வல்லபாய் பட்டேல் அருங்காட்சியகத் திறப்பு விழாவில் நேற்று பங்கேற்றார். அதே மேடையில் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல் மந்திரியுமான நரேந்திர மோடியும் கலந்துகொண்டு பேசினார்.

பின்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த மோடி, குஜராத் மாநிலம் தொடர்பான அதிமுக்கிய பிரச்சினைகள் தொடர்பாக பிரதமருடன் பேச நேரம் ஒதுக்கி தரும்படி நாங்கள் கேட்டபோது அவர் மறுத்து விட்டார் என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தின் அதிமுக்கிய பிரச்சினைகளாக நர்மதா அணையின் உயரம், வெள்ளம் மற்றும் விவசாயிகளின் நிலை தொடர்பாக பேசுவதற்கு நேரம் ஒதுக்கி தருமாறு நாங்கள் பிரதமரிடம் கேட்டோம்.

அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்ட அவர், மாநில காங்கிரஸ் அலுவலகத்தை பார்வையிட செல்வதில் தான் குறியாக இருந்தார் என்று மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டள்ளார்.

...

shared via

No comments:

Post a Comment

Popular Posts