Saturday, October 26, 2013

விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: ராஜஸ்தான் கூட்டத்தில் மோடி தாக்கு Central Government did not take steps to control price rise Modi talk in Rajasthan

விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: ராஜஸ்தான் கூட்டத்தில் மோடி தாக்கு Central Government did not take steps to control price rise Modi talk in Rajasthan

உதய்பூர், அக். 26-

ராஜஸ்தான் மாநிலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் உதய்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. வாஜ்பாய் ஆட்சியின்போது டீசல் விலை 22 ரூபாயாக இருந்தது. இப்போது 60 ரூபாயைத் தாண்டிவிட்டது. 100 நாட்களில் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதாக கூறினார்கள். பணவீக்கம் விஷயத்தில் நடந்தது என்ன? என்பதை அவர்கள் தெரிவிக்க வேண்டும்.

வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வெங்காய உற்பத்தியில் வெறும் 5 சதவீதம் தான் பற்றாக்குறை உள்ளது. ஆனால் விலையோ 1500 சதவீதம் உயர்ந்திருக்கிறது. விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

காங்கிரஸ் கட்சி, மக்கள் நலத்திட்டங்களைப் பற்றி பேசுவதற்குப் பதிலாக, குடும்ப நாடங்களை ஓட்டிக்கொண்டிருக்கிறது. குடும்ப நாடகங்கள் இந்திய குடும்பங்களில் மிகவும் பிரபலம்.

காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக வழக்குகள் உள்ளன. ஆனால் அந்த விஷயத்தில் சி.பி.ஐ. மவுனமாக இருக்கிறது. ஆனால் பா.ஜனதா கட்சியின் வசுந்தரா ராஜே, ராமன் சிங், சிவராஜ் சிங் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தபோது சி.பி.ஐ. இப்படி மவுனமாக இருக்கவில்லை. அரசியல் நோக்கங்களுக்காக சி.பி.ஐ. பயன்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

...

shared via

திருட்டு பைக்கில் ராஜஸ்தானை சுற்றி வந்த ராகுல் காந்தி: மோடி கடும் தாக்கு modi alleges rahul strolled on stolen bike in rajasthan

திருட்டு பைக்கில் ராஜஸ்தானை சுற்றி வந்த ராகுல் காந்தி: மோடி கடும் தாக்கு modi alleges rahul strolled on stolen bike in rajasthan

ஜெய்பூர், அக். 27-

பிரதமர் பதவிக்கான பா.ஜ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி நாடெங்கிலும் சுற்றுப் பயணம் செய்து மக்களின் ஆதரவை திரட்டி வருகிறார்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மோடி பேசியதாவது:-

ராஜஸ்தானின் மந்திரியாக பதவி வகித்த பாபுலால் நாகர் மீதே கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. எந்த பெண்ணாவது தனியாக சென்று ராஜஸ்தான் மந்திரிகளை சந்தித்து தங்களின் புகார்களை அளிக்க முன்வருவார்களா? பெண்களின் கண்ணியம் இங்கு மதிக்கப்படுவது இல்லை.

முதல் மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு ராஜஸ்தான் மாநிலத்தையே அழித்து விட்டது. இந்த காங்கிரஸ் அரசை மாநிலத்தை (ராஜஸ்தான்) விட்டே தூக்கி எறிந்தால் இந்தியாவின் முகமாக ராஜஸ்தான் மாறிவிடும்.

ராகுல் காந்தி தனது பாட்டி மற்றும் அப்பா படுகொலை செய்யப்பட்டதாக கதைகளை சொல்லி குடும்ப சீரியல்களை பொதுகூட்டக் மேடைகளில் நடத்தி வருகிறார்.

கோபால்கர் கலவரத்தில் 10 உயிர்கள் பலியானதால் தனது கட்சியின் முதல் மந்திரி வேட்பாளர் அசோக் கெலாட்டை கூட நம்பாமல் யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக ராகுல் காந்தி ஒரு பைக்கின் பின்னால் அமர்ந்தபடி கோபால்கர் பகுதியை சுற்றி வந்தார்.

அந்த பைக்கை ஓட்டியது யார்? அந்த பைக் யாருடையது? என்பது உங்களுக்கு தெரியும். அது காணாமல் போனதாக கூறப்பட்ட ஒரு திருட்டு பைக்.

தேர்தல் நெருங்கி விட்டதால் பா.ஜ.க. தலைவர்கள் குலாப் ரத்தோர் ஆகியோர்  மீது சி.பி.ஐ.யை ஏவிவிட்ட காங்கிரஸ் கட்சியின் ராஜஸ்தான் மாநில ஆட்சி தற்போது முன்னாள் முதல் மந்திரி வசுந்தரா ராஜேவையும் பழி வாங்க நினைக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

...

shared via

ஐ.எஸ்.ஐ.யிடம் தொடர்பில் உள்ள முஸ்லிம்கள் பெயரை வெளியிட தயாரா? ராகுல் காந்திக்கு மோடி சவால் Modi challenge to Rahul ready to reveal the names of Muslim people involved to ISI

ஐ.எஸ்.ஐ.யிடம் தொடர்பில் உள்ள முஸ்லிம்கள் பெயரை வெளியிட தயாரா? ராகுல் காந்திக்கு மோடி சவால் Modi challenge to Rahul ready to reveal the names of Muslim people involved to ISI

ஜான்சி, அக். 26–

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்திக்கு சரமாரியாக கேள்வி எழுப்பி சவால் விட்டார். அவரது பேச்சு விவரம் வருமாறு:–

ரெயில் நிலையத்தில் டீ விற்று வாழ்க்கையை தொடங்கிய என்னை பிரதமர் வேட்பாளராக பா.ஜ.க. அறிவித்துள்ளது. டெல்லியில் என்னை அமர வைத்தால் நமது நாட்டின் கருவூலத்துக்கு நான் காவலாளியாக இருப்பேன்.

காங்கிரஸ் ஆட்சிக்கு நீங்கள் 60 ஆண்டுகள் வாய்ப்பு கொடுத்தீர்கள். இதனால் அவர்கள் தங்களை மன்னர்கள் போல கருதி கொண்டிருக்கிறார்கள்.

பா.ஜ.க.வுக்கு 60 மாதங்கள் வாய்ப்பு தாருங்கள். இந்திய நாட்டை உலகமே வியக்கும் வகையில் மாற்றிக் காட்ட முடியும். மக்களின் கண்ணீருக்கும், கவலைகளுக்கும் பதில் சொல்லும் அரசாக பா.ஜ.க. அரசு திகழும்.

காங்கிரசின் இளவரசராக வலம் வருபவர் (ராகுல்) இந்தூர் பொதுக் கூட்டத்தில் பேசியதை நான் படித்தேன். முசாபர் நகரில் உள்ள முஸ்லிம் இளைஞர்கள் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு வைத்திருப்பதாக அந்த இளவரசர் கூறி இருக்கிறார்.

அவருக்கு இந்த தகவலை உளவுத்துறை அதிகாரி சொன்னாராம். உளவு துறை அதிகாரி, அந்த தகவலை அந்த இளவரசரிடம் (ராகுல்) ஏன் சொன்னார் என்று தெரியவில்லை.

இளவரசர் சாதாரண எம்.பி. பதவி தான் வகித்து வருகிறார். அவரிடம் உளவுத்துறை அதிகாரி தகவலை பகிர்ந்து கொண்டது பற்றி விசாரணை நடத்த வேண்டும்.

முசாபர் நகர் முஸ்லிம் வாலிபர்கள் ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு வைத்திருப்பதாக கூறும் காங்கிரஸ் இளவரசர் அந்த வாலிபர்களின் பெயர்களை வெளியிட வேண்டும். இதற்கு அவர் தயாரா? என்று சவால் விடுகிறேன்.

ஒரு வேளை அவர் அந்த முஸ்லிம் வாலிபர்களின் பெயரை வெளியிடா விட்டால், ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் அவர் அவமதிப்பதாகத்தான் அர்த்தம். இதற்காக அந்த இளவரசர் நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்.

சில தினங்களுக்கு முன்பு அந்த இளவரசர் தன் பாட்டியை சுட்டுக் கொன்ற சோகக்கதையை சொல்லி அழுது இருக்கிறார். நான் இங்கு அழுவதற்கு வரவில்லை. உங்கள் கண்ணீரை துடைக்கவே வந்திருக்கிறேன்.

பாட்டியை கொன்றவர்கள் மீது 15 ஆண்டுகள் வரை கோபத்துடன் இருந்ததாக இளவரசர் கூறி இருக்கிறார். அந்த சம்பவத்துக்காக ஆயிரக்கணக்கான சீக்கியர்களை உங்கள் கட்சி கொன்றதே, அதற்காக இதுவரை ஒருவருக்கு கூட தண்டனை அளிக்கப்படவில்லையே.

கொல்லப்பட்ட சீக்கியர்களுக்காக நீங்கள் வருத்தமோ, கோபமோபட்டதுண்டா? காயம் மீது உப்பு தடவும் வேலையை இளவரசர் கைவிட வேண்டும்.

பந்தல்கண்ட் விவசாயிகளுக்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதியை மத்திய பிரதேச முதல்–மந்திரி சிவராஜ்சிங் சவுகான் சரியாக பயன்படுத்தி இருக்கிறார். ஆனால் உத்தரபிரதேச அரசியல்வாதிகள் அந்த பணத்தை கொள்ளையடித்து தங்கள் பைகளில் போட்டு விட்டனர்.

காங்கிரஸ் இளவரசர் ஏழைகளின் வீடுகளுக்கு அடிக்கடி செல்கிறார். அவர் கட்சி கொடுத்துள்ள பரிசு இந்த ஏழ்மைதான்.

உத்தரபிரதேசத்தில் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் நடமாடுவதாக காங்கிரஸ் இளவரசர் சொல்கிறார். அப்படியானால் அவர் கட்சி என்ன செய்து கொண்டிருக்கிறது. இதற்கு காங்கிரஸ் விளக்கம் அளிக்க வேண்டும்.

ரகசியங்களை வெளியில் சொல்ல மாட்டேன் என்று பதவி ஏற்கும் போது உறுதி மொழி கொடுப்பார்கள். இதுவெல்லாம் காங்கிரஸ் இளவரசருக்கு தெரியுமா? அவர் ரகசிய காப்பு உறுதிமொழி எடுக்கவில்லையா?

உத்தரபிரதேசத்தில் ஏராளமான வளம் உள்ளது. நீங்கள் நினைத்தால் ஒட்டு மொத்த இந்தியாவின் வறுமையை ஒழிக்க முடியும்.

காங்கிரஸ் அதை செய்யாமல் பேக்கேஜ் என்ற பெயரில் திட்டங்களை அறிவிக்கிறது. காங்கிரசை நீங்கள் பேக்கிங் செய்யும் காலம் வந்து விட்டது.

இவ்வாறு மோடி பேசினார்.

...

shared via

Friday, October 25, 2013

நாட்டின் கஜானாவில் யாரும் கைவைக்க முடியாதபடி காவல் காப்பேன்: மோடி பேச்சு modi says will safe guard countrys treassury as watch man

நாட்டின் கஜானாவில் யாரும் கைவைக்க முடியாதபடி காவல் காப்பேன்: மோடி பேச்சு modi says will safe guard countrys treassury as watch man

லக்னோ, அக். 26-

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக் கூட்டத்தில் குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி பேசியதாவது:-

பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையிலும் ஊழலுக்கு எதிராக என்ன செய்ய போகிறோம்? என்று பேச காங்கிரஸ் கட்சி மறுத்து வருகிறது. பணவீக்கம், விலைவாசி உயர்வு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாகவும் பதில் அளிக்காமல் அவர்கள் மவுனம் சாதிக்கின்றனர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு மக்களுக்கு பதில் அளிக்க வேண்டாமா? ஆனால், தங்களை இந்த நாட்டின் ராஜாக்களாகவும் இளவரசர்களாகவும் கருதிக் கொண்டிருப்பவர்கள் பதில் அளிக்க விரும்பவில்லை.

மக்களாகிய நீங்கள் காங்கிரஸ் கட்சிக்கு 60 ஆண்டுகள் ஆட்சி செய்யும் பொறுப்பை தந்தீர்கள். எங்களுக்கு 60 மாதங்களை தாருங்கள்.

ஒரு காலத்தில் ரெயில்களில் டீ விற்ற என்னை  பிரதமர் பதவிக்குரிய வேட்பாளராக பா.ஜ.க. அறிவித்துள்ளது.

என்னை நீங்கள் பிரதமராக்க வேண்டாம். இந்த நாட்டின் காவல்காரனாக (வாட்ச் மேன்) மட்டும் நியமித்தால் போதும். உங்கள் காவல்காரனாக டெல்லியில் அமர்ந்து நாட்டின் கஜானாவில் யாரும் கைவைக்க முடியாதபடி நான் காவல் காப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார். 

...

shared via

என் பாட்டி, என் அப்பாவை கொன்றது போல என்னையும் கொல்வர்-ராகுல் They killed my grandmother, father; will kill me too: Rahul

என் பாட்டி, என் அப்பாவை கொன்றது போல என்னையும் கொல்வர்-ராகுல்

They killed my grandmother, father; will kill me too: Rahul

இப்புடி குழந்தை பலூனை உடைச்சுட்டா அழற மாதிரியா அழறது?!!!இப்படி அபிஷ்டு மாதிரியாங்க பேசறது? ஒருவேளை நீங்க பிஎம் ஆகிட்டா , எங்களுக்கு வாழ்க்கை மேலேயே விரக்தி வந்துடும்,அது தான் எங்களுக்கு வாழ்க்கையின் மீதான நம்பிக்கையே பொய்க்கும் இடம், பாத்துக்கங்க.

உங்க பாட்டி எமர்ஜென்சியில் விதைத்ததை சீக்கியரிடம் அறுத்தார் என்றால் மிகையில்லை,19 மாத கால கொடிய எமர்ஜென்சியில் நீங்கள் , உங்கள் புனித பசு பிம்பம் கொண்ட குடும்பம் எல்லாம் எத்தனை சொகுசாக இருந்திருப்பீர்கள் என யாருக்கும் சொல்ல வேண்டியதில்லை.

அதே எமர்ஜென்சி சமயத்தில் உங்கள் கைப்பாவை போலீஸார் & மிலிட்டரியால் நாடெங்கிலும் சந்தேகத்துக்கு இடமாக கைது செய்யப்பட்டு ,கோர்ட் விசாரணையே இன்றி சுட்டுக் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான நபர்கள், லாக்கப் டெத் செய்யப்பட்ட எதிர்கட்சியினர், நியாயம் கேட்ட படித்த,பாமர மக்களில் காலையில் வேலைக்கு போய் வீடு திரும்பாதோர்,  கட்டாய குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்ட லட்சக்கணக்கான ஆண்கள், பெண்கள், அதில் மணமே ஆகியிராத ஆண்கள், பெண்கள்,அது உங்களுக்கு மறந்துவிட்டதா?!!!

காங்கிரஸ் ஆண்ட போபாலில் விஷவாயு கசிவினால் ஒரே இரவில் தூக்கத்திலேயே மாண்டோர்கும்,சிதைக்கப்பட்ட டிஎன்ஏ உடற்கூறுகளுடன் இன்றும் மாண்டு கொண்டிருப்போர்க்கும் நீங்கள்,உங்கள் காங்கிரஸ்,என்ன நீதி செய்தீர்கள்?

இப்படி  நீங்கள் செய்த அக்கிரமம் ஒன்றா இரண்டா?!!!தெய்வம் நின்று கொல்லும் என்பது சத்தியம், அப்படித் தான் எமர்ஜென்சியில் குரூர ஆட்டம் ஆடிய உங்கள் சித்தப்பா ,தன் மகன்  பிறந்த 100வது நாளில் பயிற்சி விமான விபத்தில் இறந்ததும்!!! . போகும் போது கூட உடன் ஒருவரை அழைத்து போனார் புண்ணியவான். அது மறந்துவிட்டதா?!!!

இந்திரா அம்மையாரை இரண்டு சீக்கியர்கள் கொன்றனர்,அதற்கு பரிகாரமாக 8000  [டெல்லியில் மட்டும் 3000 பேர்][அரசு சொன்ன கணக்கு] சீக்கியரை ஆண் பெண்,குழந்தைகள்,பிறந்த சிசு என பேதமின்றி கொன்றார்களே உங்கள் திருத்தொண்டர்கள், அது மறந்துவிட்டதா?!!!

அந்த சீக்கியப் படுகொலைகளுக்கு சப்பை கட்டு கட்ட ஒரு பெரிய ஆல மரம் விழும் போது நிலம் அதிரவே செய்யும் என சொல்லிய பின்னர் அதற்கு பல திசைகளிலும் எதிர்ப்பு திரண்டு வரவே மன்னிப்பு கேட்டாரே உங்கள் தந்தை ராஜிவ். அது மறந்துவிட்டதா?!!!

எல்லாவற்றிற்கும் மேலாக இலங்கை ராணுவத்துக்கும் புலிகளுக்கும் மத்தியஸ்தம் செய்ய உங்கள் தந்தை ராஜீவ் காந்தி அனுப்பிய அமைதிப்படையை யாராலுமே  மறக்க முடியாது, 3 வருட அட்டூழியத்துக்கு பின்னர் அமைதிப் படையை வெளியேற்ற புலிகளும்,அவர்கள் எதிரிகளான சிங்கள ராணுவமும் ஒன்றாய் இணைந்து பட்ட பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல,அது ஆப்பரேஷன் பூமாலை அல்ல ஆப்பரேஷன் சவமாலை,

உலக அரங்கில் அமைதியை திரும்ப வைத்தவர் என ராஜீவின் புகழை பரைசாற்றும் அற்ப சுயநலத்துக்காக,புற்றுநோய் கிருமி போல நாட்டையே சூறையாடிய கோரப்படை அது,ஆப்பரேஷன் பூமாலையின் அட்டூழியங்களால் மடிந்த உயிர்களுக்கும் ,வல்லுறவு செய்யப்பட்ட சகோதரிகளுக்கும்,அங்கே இன்றும் நடைபிணங்கள் போல வாழ்பவர்க்கும் நீங்கள் என்ன செய்தீர்கள் ராகுல்?,அந்த ரத்த வாடை காயும் முன்பு முள்ளிவாய்க்கால் சம்பவத்துக்கு துணை நின்று சுமார் மூன்று லட்சம் பேர் மடிய காரணமாக இருந்தீர்களே?!!!அது மறந்துவிட்டதா?!!! இன்னும் எழுதவே அயற்சியாக இருக்கிறது,ஊழல் செய்வதில் கின்னஸ் சாதனை  புரிந்த கட்சி என்பது தான் உங்கள் சாதனையாக இருக்கிறது.

உங்களை விட மக்களாகிய எங்களுக்கு நிறைய வரலாறு  தெரியும் ,அவை நீங்கா வடுக்களாக எங்கள் மனதில் இன்னும் உள்ளன. அதை நாங்கள் மறக்கப்போவதில்லை. உங்கள் குடும்பத்தைப் பற்றி தேடினாலே இணையம் நல்லதாக எதுவும்  தருவதில்லை,  அதற்கு முதலில் ஏதாவது வழி பாருங்கள்.அப்புறம் மரண பயம் கொள்ளலாம்.

அண்ணாத்தையின் மரணபயத்தை

shared via

வல்லபாய் பட்டேல் அருங்காட்சியகம் திறப்பு விழாவில் பிரதமருடன் மோடி பங்கேற்பு modi to share dias with pm

வல்லபாய் பட்டேல் அருங்காட்சியகம் திறப்பு விழாவில் பிரதமருடன் மோடி பங்கேற்பு modi to share dias with pm

அகமதாபாத், அக்.25- 

சர்தார் வல்லபாய் பட்டேலின் வரலாற்றை புறக்கணித்து விட்டு நேருவில் பரம்பரை புகழை காங்கிரஸ் கட்சி பறைசாற்றி வருவதாக குஜராத் முதல் மந்திரி நரேந்தி மோடி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

இந்நிலையில், சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவாக இயங்கிவரும் அமைப்பின் சார்பில் குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் வல்லபாய் பட்டேலின் வாழ்க்கையை சித்தரிக்கும் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியகத்தின் திறப்பு விழா வரும் 29-ம் தேதி நடைபெறுகிறது.

இவ்விழாவில் தலைமை விருந்தினராக பிரதமர் மன்மோகன் சிங்கும் சிறப்பு விருந்தினராக நரேந்திர மோடியும் பங்கேற்கிறார்கள்.

இதற்கான அழைப்பிதழை விழா குழுவின் தலைவரும் மத்திய மந்திரியுமான தின்ஷா பட்டேல் மோடியை நேரில் சந்தித்து வழங்கினார். பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக தனது பெயர் அறிவிக்கப்பட்ட பின்னர் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரடியாகவும் பகிரங்கமாகவும் விமர்சித்து வரும் மோடி, நீண்ட நாட்களுக்கு பின்னர் பிரதமருடன் ஒரே மேடையை பகிர்ந்துக்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

...

shared via

முஸ்லிம் இளைஞர்கள் பற்றி ராகுல் காந்தியிடம் உளவுத்துறை கூறியது ஏன்? பா.ஜனதா கேள்வி Why Rahul Gandhi said intelligence about Muslim youth bjp question

முஸ்லிம் இளைஞர்கள் பற்றி ராகுல் காந்தியிடம் உளவுத்துறை கூறியது ஏன்? பா.ஜனதா கேள்வி Why Rahul Gandhi said intelligence about Muslim youth bjp question

புதுடெல்லி, அக். 25-

முசாபர்நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தொடர்பு கொண்டு, அவர்களை தங்கள் பக்கம் இழுக்க முயன்றதாகவும், இத்தகவலை உளவுத்துறை அதிகாரிகள் தன்னிடம் கூறியதாகவும் ராகுல் காந்தி பரபரப்பான தகவலை வெளியிட்டார்.

ராகுல் காந்தியன் இந்த கருத்துக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது முஸ்லிம்களின் தேசப்பற்று குறித்த கேள்விகளை எழுப்பியிருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

உளவுத்துறை அதிகாரிகள் ராகுல் காந்தியிடம் ஏன் இந்த தகவலை தெரிவித்தார்கள்? என்று பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

பா.ஜனதா செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், "ராகுல் ஒரு எம்.பி., நாங்களும் எம்.பி.க்கள் தான். அவர் ஒரு கட்சி நிர்வாகி, நாங்களும் கட்சி நிர்வாகிகள்தான். உளவுத்துறை எங்கள் கட்சி நிர்வாகிகளிடம் அந்த தகவலை தெரிவிக்கவில்லை. அவரிடம் மட்டும் எப்படி கூறமுடியும்? அவர் பிரதமரோ, உள்துறை மந்திரியோ அல்ல. இதுபற்றி உள்துறை மந்திரி ஷிண்டே விரிவான விளக்கம் அளிக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார். 

...

shared via

Wednesday, October 23, 2013

வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு மத்திய மந்திரிக்கு மோடி அழைப்பு Modi invites Jairam ramesh to sardar patel statue function

வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு மத்திய மந்திரிக்கு மோடி அழைப்பு Modi invites Jairam ramesh to sardar patel statue function

புதுடெல்லி, அக். 23-

அரசியல் ரீதியாக தன்னை கடுமையாக விமர்சித்து வரும் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷை குஜராத்தில் நடைபெறும் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க வரும்படி நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

கழிவறைகளை முதலில் கட்டி விட்டு ஆலயங்களை கட்டுவது பற்றி யோசிப்போம் என மோடி பேசியதற்கு கண்டனம் தெரிவித்த மத்திய கிராமப்புற மேம்பாட்டு மந்திரி ஜெய்ராம் ரமேஷ் மோடிக்கு ஞானம் பிறப்பதற்கு முன்னதாகவே மத்திய அரசு நாடு முழுவதும் லட்சக்கணக்கான கழிவறைகளை கட்டியுள்ளது என்றும் பத்மாசூரன் போல் மோடி தன்னைத் தானே அழித்துக் கொள்வார் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் சர்தார் சரோவர் அணையின் அருகே நர்மதா ஆற்றின் நடுவில் 182 மீட்டர் உயரமுள்ள சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலை நிறுவப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை விட இருமடங்கு உயரத்துடன் உலகின் அடையாள சின்னங்களின் ஒன்றாக உருவாக்கப்பட்டுள்ள இந்த சிலையின் திறப்பு விழா வரும் 31-ம் தேதி நடைபெறுகிறது.

ஒருமைப்பாட்டு சிலை எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சிலையின் திறப்பு விழாவில் பங்கேற்க வரும்படி மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷுக்கு குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியுள்ளார்.

என் அன்பிற்குரிய ஜெய்ராம் அவர்களே!

எக்தா அறக்கட்டளை என்ற அமைப்பால் நிறுவப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேலின் இந்த பிரமாண்ட சிலை திறப்பு விழா நமது நாட்டின் சமூக, கலாசாரத்தை பிரதிபலிக்கும் சின்னமாக திகழும் என நாங்கள் நம்புகிறோம்.

இந்த சிலையின் திறப்பு விழாவில் அனைத்து தரப்பினரும் பங்கேற்க வேண்டும். தாங்களும் இவ்விழாவில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறேன் என்று அந்த கடிதத்தில் மோடி எழுதியுள்ளார்.

...

shared via

BJP will do well in Delhi polls under Harsh Vardhan: Modi

BJP will do well in Delhi polls under Harsh Vardhan: Modi

Gujarat Chief Minister and BJP's prime ministerial candidate Narendra Modi on Wednesday expressed confidence that the party will do well in Delhi Assembly polls under the leadership of Harsh Vardhan.

"Congratulations to Dr. Harsh Vardhan on being named BJP's CM candidate for upcoming Delhi elections. My best wishes," Mr. Modi said on twitter.

"As Health Minister, his (Harsh Vardhan's) trend-setting polio eradication drive made Delhi polio-free & now I am sure he will free Delhi from misgovernance," he further said.

He further wrote that "under the leadership of Dr. Harsh Vardhan and Shri Vijay Goyal, I am confident BJP will do great in the Delhi Vidhan Sabha Elections."

The decision to declare Dr Harsh Vardhan as BJP's chief ministerial candidate for the December 4 Delhi Assembly elections was taken by the party's parliamentary board on Wednesday.

Mr. Modi was not present in the meeting but had given his consent for the name of Dr. Vardhan.

...

shared via

Tuesday, October 22, 2013

மோடி பிரதமராவதை யாராலும் தடுக்க முடியாது: சத்ருகன் சின்கா திடீர் பல்டி Satrughan Singha claims nobody can stop Modi becoming PM

மோடி பிரதமராவதை யாராலும் தடுக்க முடியாது: சத்ருகன் சின்கா திடீர் பல்டி Satrughan Singha claims nobody can stop Modi becoming PM

புதுடெல்லி, அக்.22-

மோடிக்கு உயர் பதவிகள் வழங்கப்படுவதை ஆரம்ப காலத்தில் அத்வானியுடன் சேர்ந்து எதிர்த்து வந்த பாலிவுட் நடிகரும் பா.ஜ.க. எம்.பி.யுமான சத்துருகன் சின்கா தற்போது மோடி பிரதமராவதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.

மோடி எதிர்ப்பு மனப்போக்கை கைவிட்டு தற்போது பா.ஜ.க.வின் மைய நீரோட்டத்தில் இணைந்துள்ள சத்ருகன் சின்கா, மோடியை பிரதமராக்குவது எனது கட்சி எனக்கு இட்டுள்ள கட்டளை அதை நான் எவ்வகையிலும் நிறைவேற்றியே தீருவேன்.

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.

பீகார் சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்கு மோடி போனால் அவர் மீது கோபத்தில் உள்ள முஸ்லிம் வாக்காளர்கள் பா.ஜ.க.வுக்கு எதிராக வாக்களித்து விடுவார்கள்.

அதனால் அவரை பீகார் பிரசாரத்திற்கு அனுப்பக் கூடாது என்று முன்னர் கருத்து தெரிவித்த சத்ருகன் சின்கா, பீகாரில் நடைபெறும் நிதிஷ் குமாரின் ஆட்சிக்கு பாராட்டு பத்திரம் வாசித்ததும், இந்தியாவை ஆளக்கூடிய தகுதி படைத்தவர் நிதிஷ் குமார் என வானளாவ புகழ்ந்ததும் நினைவிருக்கலாம்.

...

shared via

பாராளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்க பொதுமக்களின் கருத்துகளை திரட்டும் நரேந்திர மோடி Modi seeking peoples idea for poll manifesto

பாராளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்க பொதுமக்களின் கருத்துகளை திரட்டும் நரேந்திர மோடி Modi seeking peoples idea for poll manifesto

புதுடெல்லி, அக்.23-

இணையதளம், சமூகவலைத்தளம் ஆகியவற்றின் மூலம் இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகளில் உள்ள மக்களிடம் இடைவெளியற்ற தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளவர் குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி.

பா.ஜ.க.வின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக இவரது பெயர் அறிவிக்கப்பட்ட பிறகு தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் மோடி பேசும் பொதுக்கூட்டங்களில் ஏராளமான மக்கள் குவிவதாக ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.

இந்நிலையில், பா.ஜ.க. வெளியிடவுள்ள பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்பவை தொடர்பான பொதுமக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்கும் வகையில் மோடியின் டுவிட்டர் பக்கம் வாயிலாக தனி இணைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இணைப்புக்குள் சென்று தேர்தல் அறிக்கை எவ்வாறு அமைய வேண்டும் என்று பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என மோடி டுவீட் செய்துள்ளார்.

உங்கள் குரல் - உங்கள் தேர்தல் அறிக்கை என்றும் மோடி தெரிவித்துள்ளார்.

...

shared via

Monday, October 21, 2013

மோடியை பிரதமராக்கினால் ஊழலற்ற ஆட்சி நடத்துவார்: பொன் ராதாகிருஷ்ணன் பேச்சு modi prime minister not bribe regime pon radhakrishnan speech in kanyakumari

மோடியை பிரதமராக்கினால் ஊழலற்ற ஆட்சி நடத்துவார்: பொன் ராதாகிருஷ்ணன் பேச்சு modi prime minister not bribe regime pon radhakrishnan speech in kanyakumari

கன்னியாகுமரி, அக். 21–

கன்னியாகுமரி தெற்கு ரத வீதியில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய பாரதீய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் மகேஷ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்கள் முடிசூடும் பெருமாள், ரத்தினசாமி, கன்னியாகுமரி பேரூர் பாரதீய ஜனதா தலைவர் தங்கத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய வர்த்தகப்பிரிவு தலைவர் சுடலைமணி வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:–

மத்தியில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து துறைகளும் தோற்றுப் போய் உள்ளது. விலைவாசி உயர்ந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாத மந்திரிகளை காட்ட முடியாது. பிரதமர் முதல் பெரும்பாலான மந்திரிகள் ஊழலில் சிக்கி உள்ளனர். ஸ்பெக்டரம் ஊழலில் முன்னாள் மத்திய மந்திரி ராசா ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஸ்பெக்டரம் பிரச்சினையில் தொடர்புடைய பிரதமர் மற்றும் மத்திய மந்திரி ப. சிதம்பரத்தையும் சிறையில் அடைத்திருக்க வேண்டும்.

தற்போது நிலக்கரி ஊழல் நடந்துள்ளது. இதில் பிரதமர் குற்றவாளி என்று அந்த துறை செயலாளரே கூறி உள்ளார். ஆனால் மத்திய அரசு அது தொடர்பான ஆவணங்களை களவு செய்து விட்டது.

அதே சமயம் பாரதீய ஜனதா ஆட்சி வாஜ்பாய் தலைமையில் நடந்தபோது விலைவாசி உயர்வு கட்டுப் படுத்தப்பட்டது. அணுகுண்டு சோதனை நடத்தி உலகளவில் இந்தியா சாதனை படைத்தது. அமெரிக்கா, ஜப்பான் எச்சரிக்கையை மீறி இந்த சாதனையை வாஜ்பாய் அரசு படைத்தது.

மேலும் அமெரிக்கா, ஜப்பான், சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் நமது நட்பு பலமாக விளங்கியது. கன்னியாகுமரி–காஷ்மீர் தங்க நாற்கர சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது போக்குவரத்து சீர் அடைந்து நாடு முன்னேற்றம் அடைகிறது.

ஊழல்களின் மொத்த உருவமாக மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு உள்ளது. நரேந்திரமோடியை பிரதமராக்கினால் ஊழல் அற்ற நல்ல ஆட்சியை கொடுப்பார். விலைவாசி உயர்வு கட்டுப் படுத்தப்படும். குஜராத்தை இந்தியாவில் முதல் மாநில மாக்கியது போல் இந்தியாவை உலக வல்லரசு நாடாக முதன்மை நாடாக மாற்றுவார்.

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் மத்திய அரசு பங்கேற்கும் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும். பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தால் கச்சத் தீவை மீட்க நரேந்திரமோடி நடவடிக்கை எடுப்பார்.

இவ்வாறு அவர் பேசினார்.

...

shared via

Popular Posts