Wednesday, October 16, 2013

நரேந்திர மோடி பிரதமர் ஆனால் மகிழ்ச்சி அடைவேன்: அத்வானி Narendra Modi prime minister i ll happy advani

நரேந்திர மோடி பிரதமர் ஆனால் மகிழ்ச்சி அடைவேன்: அத்வானி Narendra Modi prime minister i ll happy advani

Tamil NewsToday,

அகமதாபாத், அக். 16-

பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை நியமித்தபோது அதனை கடுமையாக விமர்சித்தவர் அத்வானி. கட்சிப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக கூறினார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் சமாதானம் செய்ததையடுத்து தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்.

அதன்பின்னர் கடந்த மாதம் போபாலில் நடந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் மோடியும், அத்வானியும் பங்கேற்றனர். அப்போது அத்வானியின் காலைத் தொட்டு வணங்கனார் மோடி. ஆனால், அத்வானியோ அவருக்கு நேரடியாக ஆசி வழங்காமல், தனது கவனத்தை வேறு பக்கமாக திருப்பிக்கொண்டார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல் முறையாக நரேந்திர மோடியை அத்வானி பாராட்டியது தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

"மோடி பிரதமர் ஆனால் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைவேன். மோடியிடம் வழக்கத்திற்கு மாறான ஒரு தகுதி உள்ளது. அவர் எப்போதும் புதியனவற்றை செயல்படுத்துவது பற்றி சிந்தித்துக்கொண்டிருப்பார். இந்தியாவில மட்டுமல்ல உலகம் முழுவதிலும் இருந்து அவருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன" என்று அத்வானி பேசினார்.

காந்தி நகர் தொகுதி எம்.பி.யான அத்வானிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என்று பா.ஜனதா நிர்வாகிகளுக்கு மோடி அறிவுறுத்தியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரவேற்புக்குப் பின்னர், மோடியும் அத்வானியும் ஒரே காரில் விழா நடைபெறும் இடத்திற்கு வந்தனர்.
...
Show commentsOpen link

No comments:

Post a Comment

Popular Posts