ப.சிதம்பரத்தை தமிழர்கள் ஏன் டெல்லிக்கு அனுப்பினார்கள் என தெரியவில்லை: மோடி தாக்கு Narendra Modi asks why did Tamils send Chidambaram to Delhi
சென்னை, அக். 18-
பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று ஒருநாள் பயணமாக தமிழகம் வந்தார். இன்று மாலை சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் மோடி கலந்துகொண்டு நானி பல்கிவாலா நினைவு உரையாற்றினார். அப்போது மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையைக் கடுமையாகத் தாக்கி பேசினார்.
ரூபாயின் மதிப்பு தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐ.சி.யு.) உள்ளது என்று கூறிய அவர், சிதம்பரத்தை தமிழக மக்கள் ஏன் டெல்லிக்கு அனுப்பினார்கள் எனத் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டார்.
வாஜ்பாயின் தூதரக கொள்கைகளுக்கு மீண்டும் உயிர்தர வேண்டும். பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அவரது கட்சிக்குள்ளேயே மதிப்பு இல்லை என்றும் மோடி பேசினார்.
...
shared via
No comments:
Post a Comment