மோடியின் கான்பூர் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள மத்திய மந்திரிக்கு அழைப்பு Jaiswal and Oppn leaders invited for Modi Kanpur rally
கான்பூர், அக். 14-
உத்தரப் பிரதேசத்தில் உள்ள கான்பூரில் வரும் 19-ம் தேதி நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசுகிறார். பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங், மதத் தலைவர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள கான்பூர் தொகுதியின் எம்.பி.யும், மத்திய அமைச்சருமான ஸ்ரீபிரகாஷ் ஜெய்சுவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கான்பூர் மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் சுரேந்திர மைதினி கூறியதாவது:-
இக்கூட்டத்திற்கு சாதி, மதம், கட்சிகள் வேறுபாடின்றி ஒரு லட்சம் பேருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. கான்பூர் எம்.பி.யும் மத்திய மந்திரியுமான ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், சமாஜ்வாடி கட்சியின் தலைவர்கள், மந்திரிகள், எம்.எல்.ஏ.-க்கள் மற்றும் எதிர்க்கட்சியினருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.
நல்ல எண்ண அடிப்படையில் இவர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்ப வேண்டியது எங்கள் கடமை. கூட்டத்திற்கு வருவது அவர்களின் விருப்பத்தை பொறுத்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
...
shared via
No comments:
Post a Comment