மோடியை பாராட்டிய ஆந்திர காங்கிரஸ் எம்.பி. Andhra Congress MP praising Modi
Tamil NewsYesterday,
விஜயவாடா, அக். 7-
பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை முன்னிலைப்படுத்திய நாள் முதல், காங்கிரஸ் கட்சி அவரது செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது. இந்நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ஒருவர் மோடியை பாராட்டியிருக்கிறார்.
குண்டூர் மக்களவைத் தொகுதி எம்.பி.யும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-
தனி தெலுங்கானா மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு பா.ஜனதா ஆதரவு அளிக்கும் என்று காங்கிரஸ் எதிர்பார்க்கிறது.
ஆனால் தெலுங்கானா விஷயத்தில் பா.ஜனதா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, ஒன்றுபட்ட ஆந்திராவுக்கு பா.ஜனதா கட்சி ஆதரவு தெரிவித்தால், 13 மாவட்டங்கள் கொண்ட சீமாந்திரா பகுதியில் நிச்சயம் 10 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெறும்.
பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாட்டின் அனைத்து பகுதி இளைஞர்களையும் கவர்ந்துள்ளார். இளைஞர்களிடையே நேர்மறையான தாக்கத்தை மோடி ஏற்படுத்தியிருக்கிறார்.
தெலுங்கானாவை உருவாக்குவதன் மூலம் தெலுங்கு மக்களை காங்கிரஸ் பிரிக்கிறது. எனவே, ஆந்திராவை பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து எம்.பி. பதவியில் இருந்தும் காங்கிரஸ் கட்சியிலிருந்தும் விலக முடிவு செய்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
...
Show commentsOpen link
No comments:
Post a Comment