Monday, October 21, 2013

மோடியை பிரதமராக்கினால் ஊழலற்ற ஆட்சி நடத்துவார்: பொன் ராதாகிருஷ்ணன் பேச்சு modi prime minister not bribe regime pon radhakrishnan speech in kanyakumari

மோடியை பிரதமராக்கினால் ஊழலற்ற ஆட்சி நடத்துவார்: பொன் ராதாகிருஷ்ணன் பேச்சு modi prime minister not bribe regime pon radhakrishnan speech in kanyakumari

கன்னியாகுமரி, அக். 21–

கன்னியாகுமரி தெற்கு ரத வீதியில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய பாரதீய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் மகேஷ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்கள் முடிசூடும் பெருமாள், ரத்தினசாமி, கன்னியாகுமரி பேரூர் பாரதீய ஜனதா தலைவர் தங்கத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய வர்த்தகப்பிரிவு தலைவர் சுடலைமணி வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:–

மத்தியில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து துறைகளும் தோற்றுப் போய் உள்ளது. விலைவாசி உயர்ந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாத மந்திரிகளை காட்ட முடியாது. பிரதமர் முதல் பெரும்பாலான மந்திரிகள் ஊழலில் சிக்கி உள்ளனர். ஸ்பெக்டரம் ஊழலில் முன்னாள் மத்திய மந்திரி ராசா ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஸ்பெக்டரம் பிரச்சினையில் தொடர்புடைய பிரதமர் மற்றும் மத்திய மந்திரி ப. சிதம்பரத்தையும் சிறையில் அடைத்திருக்க வேண்டும்.

தற்போது நிலக்கரி ஊழல் நடந்துள்ளது. இதில் பிரதமர் குற்றவாளி என்று அந்த துறை செயலாளரே கூறி உள்ளார். ஆனால் மத்திய அரசு அது தொடர்பான ஆவணங்களை களவு செய்து விட்டது.

அதே சமயம் பாரதீய ஜனதா ஆட்சி வாஜ்பாய் தலைமையில் நடந்தபோது விலைவாசி உயர்வு கட்டுப் படுத்தப்பட்டது. அணுகுண்டு சோதனை நடத்தி உலகளவில் இந்தியா சாதனை படைத்தது. அமெரிக்கா, ஜப்பான் எச்சரிக்கையை மீறி இந்த சாதனையை வாஜ்பாய் அரசு படைத்தது.

மேலும் அமெரிக்கா, ஜப்பான், சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் நமது நட்பு பலமாக விளங்கியது. கன்னியாகுமரி–காஷ்மீர் தங்க நாற்கர சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது போக்குவரத்து சீர் அடைந்து நாடு முன்னேற்றம் அடைகிறது.

ஊழல்களின் மொத்த உருவமாக மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு உள்ளது. நரேந்திரமோடியை பிரதமராக்கினால் ஊழல் அற்ற நல்ல ஆட்சியை கொடுப்பார். விலைவாசி உயர்வு கட்டுப் படுத்தப்படும். குஜராத்தை இந்தியாவில் முதல் மாநில மாக்கியது போல் இந்தியாவை உலக வல்லரசு நாடாக முதன்மை நாடாக மாற்றுவார்.

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் மத்திய அரசு பங்கேற்கும் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும். பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தால் கச்சத் தீவை மீட்க நரேந்திரமோடி நடவடிக்கை எடுப்பார்.

இவ்வாறு அவர் பேசினார்.

...

shared via

No comments:

Post a Comment

Popular Posts