திருட்டு பைக்கில் ராஜஸ்தானை சுற்றி வந்த ராகுல் காந்தி: மோடி கடும் தாக்கு modi alleges rahul strolled on stolen bike in rajasthan
ஜெய்பூர், அக். 27-
பிரதமர் பதவிக்கான பா.ஜ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி நாடெங்கிலும் சுற்றுப் பயணம் செய்து மக்களின் ஆதரவை திரட்டி வருகிறார்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மோடி பேசியதாவது:-
ராஜஸ்தானின் மந்திரியாக பதவி வகித்த பாபுலால் நாகர் மீதே கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. எந்த பெண்ணாவது தனியாக சென்று ராஜஸ்தான் மந்திரிகளை சந்தித்து தங்களின் புகார்களை அளிக்க முன்வருவார்களா? பெண்களின் கண்ணியம் இங்கு மதிக்கப்படுவது இல்லை.
முதல் மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு ராஜஸ்தான் மாநிலத்தையே அழித்து விட்டது. இந்த காங்கிரஸ் அரசை மாநிலத்தை (ராஜஸ்தான்) விட்டே தூக்கி எறிந்தால் இந்தியாவின் முகமாக ராஜஸ்தான் மாறிவிடும்.
ராகுல் காந்தி தனது பாட்டி மற்றும் அப்பா படுகொலை செய்யப்பட்டதாக கதைகளை சொல்லி குடும்ப சீரியல்களை பொதுகூட்டக் மேடைகளில் நடத்தி வருகிறார்.
கோபால்கர் கலவரத்தில் 10 உயிர்கள் பலியானதால் தனது கட்சியின் முதல் மந்திரி வேட்பாளர் அசோக் கெலாட்டை கூட நம்பாமல் யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக ராகுல் காந்தி ஒரு பைக்கின் பின்னால் அமர்ந்தபடி கோபால்கர் பகுதியை சுற்றி வந்தார்.
அந்த பைக்கை ஓட்டியது யார்? அந்த பைக் யாருடையது? என்பது உங்களுக்கு தெரியும். அது காணாமல் போனதாக கூறப்பட்ட ஒரு திருட்டு பைக்.
தேர்தல் நெருங்கி விட்டதால் பா.ஜ.க. தலைவர்கள் குலாப் ரத்தோர் ஆகியோர் மீது சி.பி.ஐ.யை ஏவிவிட்ட காங்கிரஸ் கட்சியின் ராஜஸ்தான் மாநில ஆட்சி தற்போது முன்னாள் முதல் மந்திரி வசுந்தரா ராஜேவையும் பழி வாங்க நினைக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
...
shared via
No comments:
Post a Comment