மோடி பிரதமராவதை யாராலும் தடுக்க முடியாது: சத்ருகன் சின்கா திடீர் பல்டி Satrughan Singha claims nobody can stop Modi becoming PM
புதுடெல்லி, அக்.22-
மோடிக்கு உயர் பதவிகள் வழங்கப்படுவதை ஆரம்ப காலத்தில் அத்வானியுடன் சேர்ந்து எதிர்த்து வந்த பாலிவுட் நடிகரும் பா.ஜ.க. எம்.பி.யுமான சத்துருகன் சின்கா தற்போது மோடி பிரதமராவதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.
மோடி எதிர்ப்பு மனப்போக்கை கைவிட்டு தற்போது பா.ஜ.க.வின் மைய நீரோட்டத்தில் இணைந்துள்ள சத்ருகன் சின்கா, மோடியை பிரதமராக்குவது எனது கட்சி எனக்கு இட்டுள்ள கட்டளை அதை நான் எவ்வகையிலும் நிறைவேற்றியே தீருவேன்.
இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்கு மோடி போனால் அவர் மீது கோபத்தில் உள்ள முஸ்லிம் வாக்காளர்கள் பா.ஜ.க.வுக்கு எதிராக வாக்களித்து விடுவார்கள்.
அதனால் அவரை பீகார் பிரசாரத்திற்கு அனுப்பக் கூடாது என்று முன்னர் கருத்து தெரிவித்த சத்ருகன் சின்கா, பீகாரில் நடைபெறும் நிதிஷ் குமாரின் ஆட்சிக்கு பாராட்டு பத்திரம் வாசித்ததும், இந்தியாவை ஆளக்கூடிய தகுதி படைத்தவர் நிதிஷ் குமார் என வானளாவ புகழ்ந்ததும் நினைவிருக்கலாம்.
...
shared via
No comments:
Post a Comment