Monday, September 30, 2013

மோடி ஒரு சிறந்த நிர்வாகி, ஜெகன் மோகன் ரெட்டி புகழாரம் Jagan Mohan Reddy praise for Narendra Modi

மோடி ஒரு சிறந்த நிர்வாகி, அவர் மதச்சார்பற்ற தளத்திற்கு வரவேண்டும்: ஜெகன் மோகன் ரெட்டி புகழாரம் Jagan Mohan Reddy praise for Narendra Modi

Tamil NewsYesterday,

ஐதராபாத், செப். 30-

ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி முதல் அமைச்சராக இருந்தபோது, அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு 16 மாத சிறைவாசத்திற்கு பிறகு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஜெகன் மோகன் ரெட்டி சமீபத்தில் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டு ஐதராபாத்தில் தங்கியுள்ளார்.

இந்நிலையில் அவர் கவர்னர் ஈ.எஸ்.எல். நரசிம்மாவை சந்தித்து ஆந்திராவை இரண்டாக பிரிப்பது குறித்து சட்டசபையின் பிரத்தியேக கூட்டத்தை கூட்டி கருத்தை அறிய வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெகன் மோகன் ரெட்டி மோடி குறித்து கூறியதாவது:-

சிறந்த ஒரு நிர்வாகியான மோடியை பிரதமர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை நான் வரவேற்கிறேன். மோடி மதச்சார்பற்ற தளத்திற்கு வரவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மதம் அரசியலாக்கப்பட வேண்டியதில்லை.
ஆந்திராவை இரண்டாக பிரிக்க வேண்டும் என்கிற காங்கிரஸ் கட்சியின் முடிவை நான் எதிர்க்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் குடும்பத்தினர், மோடியுடன் கூட்டு இல்லை என்று அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 
...
Show commentsOpen link

No comments:

Post a Comment

Popular Posts