Thursday, September 26, 2013

திருச்சி இளந்தாமரை மாநாடு Trichy conference BJP volunteers participate

திருச்சியில் இன்று மாலை பாரதீய ஜனதா இளைஞரணி சார்பில் இளந்தாமரை மாநாடு நடக்கிறது. இதில் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, கட்சியின் அகில இந்திய தலைவர் ராஜ்நாத்சிங் மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள். இந்த மாநாட்டில் கலந்து கொள்ள நாடு முழுவதும் இருந்து இணைதளம் மற்றும் நேரடி முன்பதிவுகள் முலம் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பதிவு செய்திருந்தனர்.

இதனால் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் பா. ஜனதா தொண்டர்கள் குவிவார்கள் என்று பா.ஜனதா தலைவர்கள் நம்பிக்கையில் இருந்தனர். அதை நனவாக்கும் வகையில் திருச்சி இளந்தாமரை மாநாட்டுக்கு நேற்று மாலை முதலே வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து குவிந்தனர்.
மேலும் நேற்று இரவு முதல் இன்று பகலிலும் ஏராளமான வாகனங்களில் பா.ஜனதா தொண்டர்கள் சாரை சாரையாக வந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் வாகனங்கள் நிறுத்த ஒதுக்கப்பட்டிருந்த பஞ்சப்பூர், திருவானைக்காவல் உட்பட 7 இடங்களில் அவர்களுக்கு வசதியான இடங்களில் வாகனங்களை நிறுத்தி விட்டு மாநாட்டு திடலுக்கு வந்தனர். அவர்களை பா.ஜனதா தலைவர்கள் மாநாடு நடக்கும் கிரவுண்ட் பகுதியில் நின்று வரவேற்றனர்.
இன்று காலையிலேயே லட்சக்கணக்கான பா.ஜனதா தொண்டர்கள் திருச்சியில் குவிந்ததால் பா.ஜனதா தலைவர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். திருச்சி மாநகரம் முழுவதும் எங்கு பார்த்தாலும மக்கள் வெள்ளமாக காட்சி அளித்தது.
இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க திருச்சி மாநகர பகுதி மற்றும் மாநாட்டு திடல் பகுதிகளில் போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் உத்தரவின் பேரில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Popular Posts