நரேந்திர மோடி வருகையையொட்டி திருச்சியில் இன்று பல்வேறு கல்லூரிகளுக்கு விடுமுறை Narendra modi visit Trichy tody colleges holiday
திருச்சியில் இன்று மாலை நடைபெறும் பாரதீய ஜனதா இளந்தாமரை மாநாட்டில் நரேந்திரமோடி பங்கேற்று பேசுகிறார். மாநாடு நடைபெறும் பொன்மலை ஜி கார்னர் பகுதிக்கு இன்று காலை முதலே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான தொண்டர்கள் குவிய தொடங்கினர்.
இதேபோன்று வெளி மாநிலங்களில் இருந்தும் தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் திருச்சி சுற்றுப்பகுதியில் உள்ள 7 சோதனை சாவடிகளில் பரிசோதனைக்கு பிறகே திருச்சி மாநகருக்குள் அனுமதிக்கிறார்கள்.திருச்சியில் இன்று பல்வேறு தனியார் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. மாணவர்கள் பலர் நரேந்திர மோடி மாநாட்டில் பங்கேற்கிறார்கள். இதற்காக ஆன்லைனில் பதிவு செய்து காத்திருந்தனர். 5–க்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment