According to the social networking giant’s top India trends of 2013, Shri Narendra Modi tops the list of the most mentioned person of the year, followed by cricketing legend Sachin Tendulkar, Apple iconic device iPhone 5s, RBI governor Shri Raghuram Rajan and India’s Mars Mission ‘Mangalyaan’. The popularity index released today by the social networking giant, takes a look at the people, moments and places that mattered the most on Facebook in India in 2013. A popular icon who promises inspiring leadership, Shri Modi successfully emerged as the most talked about person in 2013, having been the most discussed in conversations happening all over Facebook. This recent acknowledgement of his awe-inspiring virtual presence is proof enough of Shri Modi’s rising popularity, which transcends across the barriers of space and time – from present to the future, and from the real to the virtual
Tuesday, December 10, 2013
Shri Narendra Modi has been the most talked about person on Facebook, in India, for the year 2013
According to the social networking giant’s top India trends of 2013, Shri Narendra Modi tops the list of the most mentioned person of the year, followed by cricketing legend Sachin Tendulkar, Apple iconic device iPhone 5s, RBI governor Shri Raghuram Rajan and India’s Mars Mission ‘Mangalyaan’. The popularity index released today by the social networking giant, takes a look at the people, moments and places that mattered the most on Facebook in India in 2013. A popular icon who promises inspiring leadership, Shri Modi successfully emerged as the most talked about person in 2013, having been the most discussed in conversations happening all over Facebook. This recent acknowledgement of his awe-inspiring virtual presence is proof enough of Shri Modi’s rising popularity, which transcends across the barriers of space and time – from present to the future, and from the real to the virtual
Monday, November 4, 2013
நரேந்திரமோடி பாதுகாப்புக்கு 108 கமாண்டோக்கள் ஏற்பாடு: தேசிய பாதுகாப்பு படை நடவடிக்கை Modi 108 commandos for security national security force activity
நரேந்திரமோடி பாதுகாப்புக்கு 108 கமாண்டோக்கள் ஏற்பாடு: தேசிய பாதுகாப்பு படை நடவடிக்கை Modi 108 commandos for security national security force activity
புதுடெல்லி, நவ. 4–
பா.ஜ.க. பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திரமோடி நாடெங்கும் சுற்றுப் பயணம் செய்து கூட்டங்களில் பேசி வருகிறார். பாராளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு அவர் சுமார் 100 பொதுக்கூட்டங்களில் பேச திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 20–ந் தேதி பீகார் மாநிலம் பாட்னாவில் மோடி பேசிய கூட்டத்தில் குண்டுகள் வெடித்தன. இதில் 6 பேர் பலியாகினார்கள்.
குண்டுவெடிப்பை நடத்திய இந்தியன் முஜாக்தின் தீவிரவாதிகள் போலீசில் பிடிபட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் நரேந்திர மோடி உயிருக்கு தீவிரவாதிகள் குறி வைத்திருப்பது தெரிய வந்தது.
மோடி பிரசாரம் செய்ய உள்ள மற்ற கூட்டங்களில் கைவரிசை காட்ட தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பது உறுதியானது. இதையடுத்து நரேந்திரமோடிக்கு 108 கமாண்டோ வீரர்கள் கொண்டு கருப்புபூனை படை பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த இந்த 108 கமாண்டோக்கள் 3 அடுக்காக அரண் போல் நின்று மோடிக்கு பாதுகாப்பு கொடுப்பார்கள். மோடி எங்கு சென்றாலும் இந்த கமாண்டோ வீரர்களும் உடன் செல்வார்கள்.
மோடி மீது தாக்குதல் நடத்தப்படும் பட்சத்தில் கமாண்டோ வீரர்களின் முதல் அடுக்கில் இருப்பவர்கள் மோடியை அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்கு மாற்றுவார்கள். இதற்காக அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது சுற்றில் இருக்கும் கமாண்டோக்கள் மோடியை சுற்றி நின்று பாதுகாப்பு வளையமாக இருப்பார்கள். மூன்றாவது அரணாக இருப்பவர்கள் எதிரிகளை தாக்கும் பதிலடி நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்.
மத்திய உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு படை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
...
shared via
Saturday, November 2, 2013
மோடி அமைச்சரவையில் மேலும் 6 மந்திரிகள் சேர்ப்பு 6 more MLAs inducted in modi ministry
மோடி அமைச்சரவையில் மேலும் 6 மந்திரிகள் சேர்ப்பு 6 more MLAs inducted in modi ministry
அகமதாபாத், நவ. 2-
நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் அமைச்சரவையில் நேற்று 6 எம்.எல்.ஏக்கள் மந்திரிகளாக பதவி ஏற்றனர்.
குஜராத் கவர்னர் கமலா பேனிவால் பதவி பிராமணம் செய்து வைக்க சுற்றுலா இணை மந்திரியாக ஜெயேஷ் ரடாடியா, உணவு மற்றும் பொது வினியோக துறை மந்திரியாக சத்ரசின் மோரி, சாலை மற்றும் கட்டிடங்கள் துறை மந்திரியாக ஜெயட்ரத்சின் பர்மர், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மந்திரியாக ஜஷ்வந்த்சின் பபோர், குடிசை தொழில் இணை மந்திரியாக அன்ஜர் வாசன் அஹிர், கால்நடை மற்றும் மீன்வள துறை மந்திரியாக திலிப்சின் தகோர் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இவர்களில் சுற்றுலாதுறை மந்திரியாக பொறுப்பேற்றுக் கொண்ட ஜெயேஷ் ரடாடியாவின் தந்தை வித்தல் ரடாடியா கடந்த ஆண்டு சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு கட்டணம் செலுத்த மறுத்து துப்பாக்கியை காட்டி மிரட்டிய செய்தி ஊடகங்களில் வெளியானது நினைவிருக்கலாம்.
இதை தொடர்ந்து காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட அவர் பா.ஜ.க. சார்பில் மீண்டும் போர்பந்தர் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். இவருடன் சேர்ந்து காங்கிரசை விட்டு வெளியேறிய இவரது மகன் ஜெயேஷ் ரடாடியாவும் பா.ஜ.க. சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.
...
shared via
Friday, November 1, 2013
சட்டசபை தேர்தல் நடக்கும் 4 மாநிலங்களில் நரேந்திர மோடிக்கு செல்வாக்கு அதிகரிப்பு narendra modi popularity coming election held 4th state
சட்டசபை தேர்தல் நடக்கும் 4 மாநிலங்களில் நரேந்திர மோடிக்கு செல்வாக்கு அதிகரிப்பு narendra modi popularity coming election held 4th state
புதுடெல்லி, நவ. 1–
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, சத்தீஸ்கர் மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த மாநிலங்களில் பாரதீய ஜனதா கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துக் கணிப்புகளில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் இந்த 4 மாநிலங்களிலும் பிரதமர் வேட்பாளர் தொடர்பான கருத்து கணிப்பை தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நடத்தியது. அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
அதில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்– மந்திரியுமான நரேந்திர மோடிக்கு 4 மாநில மக்களும் ஏகோபித்த ஆதரவை தெரிவித்திருப்பது தெரிய வந்துள்ளது. 35 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள் நரேந்திர மோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமர் பதவிக்கு வரவேண்டும் என்று கூறியுள்ளனர்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியை 4 மாநில மக்களும் பிரதமர் பதவிக்கு விரும்பவில்லை என்பது உறுதியாகியுள்ளது. ராகுல் பிரதமராக 17 சவீதம் பேர்தான் ஆதரவு கொடுத்துள்ளனர்.
கருத்து கணிப்பு நடந்த 4 மாநிலங்களில் டெல்லியில் நரேந்திர மோடிக்கு மிக அதிகமான செல்வாக்கு இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த மாநிலத்தில் சுமார் 42 சதவீதம் பேர் மோடியை ஆதரித்துள்ளனர்.
டெல்லியில் ராகுலுக்கு வெறும் 15 சதவீதம் பேரே கை கொடுத்துள்ளனர். மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 2 மாநிலங்களிலும் ராகுலுக்கு ஓரளவு செல் வாக்கு இருக்கிறது.
பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி இருவருக்கும் மக்களிடம் செல்வாக்கு மிக, மிக குறைந்துவிட்டது தெரிய வந்துள்ளது. 4 மாநிலங்களிலும் அவர்கள் இருவருக்கும் சராசரியாக 5 சதவீத மக்களின் ஆதரவே இருக்கிறது.
எனவே வரும் பாராளுமன்ற தேர்தலில் மன்மோகன்சிங்கை பிரதமர் வேட்பாளராக நிறுத்தினால் காங்கிரஸ் நாடெங்கும் படுதோல்வியை சந்திக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரசில் வேறு எந்த மூத்த தலைவர்களுக்கும் மக்களிடம் சுத்தமாக செல்வாக்கே இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.
பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி நிலை இதை விட மோசமாக உள்ளது. 4 மாநிலங்களிலும் சராசரியாக அவருக்கு ஒரு சதவீதம் பேர்தான் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அவரை விட பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கு 4 மாநிலங்களிலும் கூடுதலாக ஒரு சதவீத மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது. சுஷ்மா சுவராஜ், நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி ஆகியோருக்கும் மக்களிடம் குறைந்த சதவீத ஆதரவே உள்ளது.
கருத்து கணிப்பு நடந்த 4 மாநிலங்களிலும் மொத்தம் 72 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 72 தொகுதிகளிலும் பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று கேட்கப்பட்டது.
அதில் பெருவாரியான மக்கள் பா.ஜ.க. பக்கம் இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் 72 தொகுதிகளில் 57 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெறும் என்று கருத்து கணிப்பு முடிவில் கூறப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் கணக்கிட்டதில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வுக்கு 180–க்கும் மேற்பட்ட இடங்கள் உறுதியாக கிடைக்கும் என்கிறார்கள். இந்த கருத்து கணிப்பு முடிவுகள் பா.ஜ.க.வினரை மிகவும் உற்சாகம் அடைய செய்துள்ளது.
...
shared via
நரேந்திர மோடிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு: உளவுத்துறை எச்சரிக்கையால் நடவடிக்கை Warning intelligence to increase security by Narendra Modi
நரேந்திர மோடிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு: உளவுத்துறை எச்சரிக்கையால் நடவடிக்கை Warning intelligence to increase security by Narendra Modi
புதுடெல்லி, நவ. 1–
பா.ஜ.க. பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குஜராத் முதல்–மந்திரி நரேந்திரமோடி நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் பேசிய பொதுக் கூட்டத்தில் இந்தியா முஜாகிதீன் தீவிரவாதிகள் குண்டு வெடிப்புகளை நடத்தியதால் 6 பேர் பலியானார்கள்.
தேசிய புலனாய்வுக் குழுவினர் நடத்திய விசாரணையில், நரேந்திரமோடியை மனித வெடிகுண்டு மூலம் கொல்ல தீவிரவாதிகள் முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது.
ஆனால், மத்திய அரசு மோடிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்க மறுத்துவிட்டது. இதனால் மோடிக்கு அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளை குஜராத் போலீசார் செய்து வந்தனர்.
இந்த நிலையில் நரேந்திர மோடிக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் அதிகரித்து இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரித்தது. நாளை அவர் பீகாருக்கு செல்லும் போது அவரை தாக்க தீவிரவாதிகள் திட்ட மிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல் கொடுத்துள்ளது.
இதைத் தொடர்ந்து நரேந்திர மோடிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மற்றும் வி.ஐ.பி.க்களுக்கு அளிக்கப்படுவது போன்று அவருக்கும் உச்சக்கட்ட பாதுகாப்பு கொடுக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அவர் எந்த ஊருக்கு சென்றாலும் இனி சிறப்பு பாதுகாப்பு படை வீரர்களின் வளையத்துக்குள்தான் இருப்பார்.
...
shared via
Wednesday, October 30, 2013
குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல் கூற நரேந்திரமோடி 2 ந்தேதி பீகார் செல்கிறார் Modi 2nd going to Bihar blast injured people seeing
குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல் கூற நரேந்திரமோடி 2 ந்தேதி பீகார் செல்கிறார் Modi 2nd going to Bihar blast injured people seeing
பாட்னா, அக்.31-
பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த 27-ந்தேதி பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கலந்து கொண்ட பொதுக்கூட்டம் நடந்தது. அப்போது நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்தனர். 82 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் நரேந்திரமோடி வருகிற 2-ந்தேதி பீகார் செல்கிறார். சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் பாட்னா செல்லும் அவர், அங்கு குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். இந்த தகவலை பீகார் மாநில பா.ஜனதா தலைவர் சுஷில்குமார் மோடி தெரிவித்துள்ளார்.
...
shared via
Tuesday, October 29, 2013
குஜராத் மாநிலம் தொடர்பான பிரச்சினைகளை பேச நேரம் ஒதுக்குவதற்கு பிரதமர் மறுத்து விட்டார்: மோடி வருத்தம் modi says PM never spared time to take gujrat issues
குஜராத் மாநிலம் தொடர்பான பிரச்சினைகளை பேச நேரம் ஒதுக்குவதற்கு பிரதமர் மறுத்து விட்டார்: மோடி வருத்தம் modi says PM never spared time to take gujrat issues
அகமதாபாத், அக்.30-
பிரதமர் மன்மோகன் சிங் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த சர்தார் வல்லபாய் பட்டேல் அருங்காட்சியகத் திறப்பு விழாவில் நேற்று பங்கேற்றார். அதே மேடையில் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல் மந்திரியுமான நரேந்திர மோடியும் கலந்துகொண்டு பேசினார்.
பின்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த மோடி, குஜராத் மாநிலம் தொடர்பான அதிமுக்கிய பிரச்சினைகள் தொடர்பாக பிரதமருடன் பேச நேரம் ஒதுக்கி தரும்படி நாங்கள் கேட்டபோது அவர் மறுத்து விட்டார் என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தின் அதிமுக்கிய பிரச்சினைகளாக நர்மதா அணையின் உயரம், வெள்ளம் மற்றும் விவசாயிகளின் நிலை தொடர்பாக பேசுவதற்கு நேரம் ஒதுக்கி தருமாறு நாங்கள் பிரதமரிடம் கேட்டோம்.
அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்ட அவர், மாநில காங்கிரஸ் அலுவலகத்தை பார்வையிட செல்வதில் தான் குறியாக இருந்தார் என்று மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டள்ளார்.
...
shared via
பட்டேல் பிரதமராயிருந்தால் நாட்டின் தலைவிதியே மாறியிருக்கும்: பிரதமர் முன்னிலையில் மோடி பரபரப்பு பேச்சு Patel should have been first PM Modi attacks
பட்டேல் பிரதமராயிருந்தால் நாட்டின் தலைவிதியே மாறியிருக்கும்: பிரதமர் முன்னிலையில் மோடி பரபரப்பு பேச்சு Patel should have been first PM Modi attacks
அகமதாபாத், அக். 29-
பிரதமர் மன்மோகன் சிங் இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த சர்தார் வல்லபாய் பட்டேல் அருங்காட்சியகத் திறப்பு விழாவில் கலந்துகொண்டார். அதே மேடையில் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல் மந்திரியுமான நரேந்திர மோடியும் கலந்துகொண்டு பேசினார். அப்போது நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு பற்றி மறைமுகமாக அவர் சாடினார். அவர் பேசியதாவது:-
நாட்டின் முதலாவது உள்துறை மந்திரியான இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல், சுதந்திரம் அடைந்தபோது சிதறுண்டு கிடந்த சமஸ்தானங்களை ஒன்றாக இணைத்து இந்திய நாட்டை உருவாக்கினார். ஆனால், அந்த ஒற்றுமையும், தேசப்பற்றும் இன்று தீவிரவாதம் மற்றும் மாவோயிசம் ஆகியவற்றால் மிரட்டப்பட்டு வருகிறது.
சர்தார் வல்லபாய் பட்டேல் முதல் இந்தியப் பிரதமராக வரவில்லையே என்று ஒவ்வொரு இந்தியரும் இன்னும் வருந்துகின்றனர். ஆனால், அவர் அன்று மட்டும் பிரதமராக ஆகியிருந்தால், இன்று நாட்டின் தலைவிதியே மாறியிருந்து இருக்கும்.
தீவிரவாதத்தை கையில் எடுத்துள்ளவர்கள் அவர்களுடைய சொந்த சமுதாயங்களுக்கே மிகப்பெரும் தீங்கை இழைத்து வருகின்றனர். மேலும் நாட்டில் வன்முறையை அரங்கேற்ற இளைஞர்களை தவறாக பயன்படுத்துகின்றனர். நாட்டின் முன்னேற்றத்தை தடுக்கும் முக்கியக் காரணியாகவும் அவர்கள் மாறிக்கொண்டிருக்கின்றனர்.
நாட்டில் வன்முறையை தூண்டியவர்கள், மகாத்மா காந்தி மற்றும் சர்தார் வல்லபாய் பட்டேல் உருவாக்கிய இந்த நாட்டில் தோல்வியையே கண்டுள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
...
shared via
Bangalore: Narendra Modi to address rally on November 17
In light of the serial blasts in Patna during a Modi rally in Bihar, the BJP has asked the state government of Karnataka to provide adequate security for the event to avoid any unfavourable circumstances on November 17.
Party spokesperson Prakash Javadekar says, "We hope that the state government takes necessary precaution." He further added,"We cannot forget the bomb blasts near BJP state office (in Bangalore) in April. Some members of the Coimbatore module were arrested in Puttur who planted these bombs as well as carried out targeted killings of five BJP leaders in Tamil Nadu and attacked L K Advani's rally in Coimbatore." He also confirmed that BJP would collect Rs 10 from party workers as an entry fee for the rally.
However, Javadekar did not give any direct answers o questions relating taking back B S Yeddyurappa into the party fold. He said, "I think you have to wait for few more days. Let's see."
OneIndia News
Patel should have been first PM, says Modi as he shares stage with Manmohan
On a momentous occasion, Prime Minister Manmohan Singh and BJP PM candidate Narendra Modi shared the stage at Ahmedabad on Tuesday evening at a function marking the inauguration of a museum dedicated to Sardar Vallabbhai Patel.
Gujarat Chief Minister Narendra Modi said that Sardar Patel had the credentials to lead India post Independence and that he, rather than Jawaharlal Nehru, should have become the country's first Prime Minister.
Speaking at length on Patel's ideology and policies, he said India would have had a very different fate if he had become the first PM.
Prime Minister Manmohan Singh, who took to the stage after Modi, emphatically stated that the first Home Minister of India and Nehru had a relationship based on respect and trust. He quoted the iconic leader from Gujarat, saying Patel himself had said it was his good fortune to have advised Nehru on matters of administration and this would not have been possible if there was no trust between the two men.
Emphasising that Sardar Patel was in pricinple a secular man, he said at this juncture, it was paramount for every leader and social worker to remind themselves the high ideals of secularism, tolerance and compassion for every citizen on which the modern nation of India was founded.
Modi and Manmohan appeared briefly together, exchanging words and laughs, as the two posed side by side for photographers.
Monday, October 28, 2013
'Modi alone can prevent terrorism'
CHENNAI,
Bharatiya Janata Party (BJP) State president Pon. Radhakrishnan on Monday said Gujarat Chief Minister and party's Prime Ministerial candidate Narendra Modi was alone capable of tackling terrorism effectively.
Condemning the Patna serial blasts that left five persons dead and many others injured, Mr. Radhakrishnan said the explosions were triggered at a time when the people of India were eagerly looking forward for Mr. Modi's speech at the 'Hunkar' rally.
"Only Mr. Modi as Prime Minister can take firm action and prevent such attacks. It is the responsibility of the voters to ensure that no candidate of the Congress is elected from Tamil Nadu.," he said after leading a demonstration to condemn the blasts.
The BJP would take out a 'padayatra' in December to thank the people across the State for their support to Mr. Modi. Many people from different walks of life were joining the party, he said.
Senior BJP leaders L. Ganesan, H. Raja were among those present. Earlier a one-minute silence was observed to pay homage to those who were killed in the Patna blasts.
Sunday, October 27, 2013
ஐ.எஸ்.ஐயுடன் முஸ்லிம்கள் தொடர்பு: ராகுலுக்கு தகவல் கொடுத்தவர் ராஜஸ்தான் போலீஸ் அதிகாரி மோடி தகவல் muslim connect with isi rajasthan police officer infirm to rahul
ஐ.எஸ்.ஐயுடன் முஸ்லிம்கள் தொடர்பு: ராகுலுக்கு தகவல் கொடுத்தவர் ராஜஸ்தான் போலீஸ் அதிகாரி மோடி தகவல் muslim connect with isi rajasthan police officer infirm to rahul
ஜெய்ப்பூர், அக். 27–
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சு மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
மதக்கலவரம் நடந்த உத்திரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் முஸ்லிம் இளைஞர்களை பாகிஸ்தான் உளவு அமைப்பினர் (ஐ.எஸ்.ஐ) சந்தித்து தீவிரவாத செயல்களில் ஈடுபடுமாறு துண்டியதாக ராகுல்காந்தி பேசினார்.
அவரது இந்த பேச்சுக்கு இஸ்லாமிய அமைப்புகள், பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. அவருக்கு எதிராக உத்தரபிரதேசத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷனும் அவர் பேசிய பேச்சின் சி.டி. பதிவு காட்சிகளை பார்க்கிறார்கள்.
இந்த நிலையில் ஐ.எஸ்.ஐ.யுடன் முஸ்லிம் இளைஞர்களுக்கு தொடர்பு இருந்த தகவலை ராகுல்காந்திக்கு ராஜஸ்தான் போலீஸ் அதிகாரி ஒருவர்தான் தெரிவித்தார் என்று நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளரான அவர் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடந்த கூட்டத்தில் இது தொடர்பாக பேசியதாவது:–
முசாபர்நகர் முஸ்லிம் இளைஞர்களுக்கு, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்பினருடன் தொடர்பு இருப்பதாக ராகுல்காந்தி தெரிவித்தார். அவருக்கு இந்த தகவலை கொடுத்தது ராஜஸ்தான் போலீஸ் அதிகாரி ஆவார். அவர் யார் என்று எனக்கு தெரியும். சட்டமன்ற தேர்தலில் அவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புகிறார். இந்த தகவலை வைத்துதான் அவர் தனது பொதுக்கூட்டத்தில் தெரிவித்தார்.
இந்த பேச்சு மூலம் கட்சிக்கு பலன் ஏற்படும் என்று அவர் நினைத்துள்ளார். குடும்ப சீரியலில் நன்றாக பேசுவதாக இளவரசர் கருதுகிறார். தன்னை மதசார்பற்றவர் என கூறுகிறார். ஆனால் மதக்கலவரங்களை தூண்டும் வகையில் பேசுகிறார்.
அரசியல் லாபத்துக்காக சி.பி.ஐ.யை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது.
பா.ஜனதா உள்பட எதிர்கட்சியினர் மீது பல வழக்குகள் போடுவதற்காகவே சி.பி.ஐ.யை பயன்படுத்துகிறது.
இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.
...
shared via
வாரிசு அரசுகளை கைவிடுகிற போது ராகுலை இளவரசன் என்று அழைப்பதை நிறுத்துவேன்: மோடி Modi says Stop calling prince Rahul to abandoned heir governments
வாரிசு அரசுகளை கைவிடுகிற போது ராகுலை இளவரசன் என்று அழைப்பதை நிறுத்துவேன்: மோடி Modi says Stop calling prince Rahul to abandoned heir governments
பாட்னா, அக்.27-
பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இன்று பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளார் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுவதற்கு முன்னர் காந்தி மைதானம் உள்பட 6 இடங்களில் குண்டு வெடித்தன. இந்த குண்டு வெடிப்பில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி கூறியதாவது:-
எனக்கு வறுமையை பற்றி நன்றாக தெரியும். ஆனால், காங்கிரஸ் தலைவர்களுக்கு வறுமையை சந்தித்தது கிடையாது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஏழைகள், விவசாயிகளுக்கு ஒன்றும் செய்து இருக்கவில்லை. அவர்கள் ஏழைகளை ஏமாற்றி வருகிறார்கள். அவர்கள் மக்களுக்கு கொடுத்த 80 விழுக்காடு வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவே இல்லை.
பரம்பரை அரசியலை காங்கிரஸ் விடுகிறபோது, நான் கட்சியின் தலைவரை இளவரசன் (ஷாஸதா) என்று அழைப்பதை நிறுத்துவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
...
shared via
நிதிஷ் ஒரு சந்தர்ப்பவாதி: பாட்னா பொதுக்கூட்டத்தில் மோடி குற்றச்சாட்டு Narendra Modi takes potshots at Nitish
நிதிஷ் ஒரு சந்தர்ப்பவாதி: பாட்னா பொதுக்கூட்டத்தில் மோடி குற்றச்சாட்டு Narendra Modi takes potshots at Nitish
பாட்னா, அக். 27-
பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று முதல் முறையாக பீகார் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட அக்கூட்டத்தில் பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் குறித்து மோடி கூறியதாவது:-
உனது நண்பர் பாரதீய ஜனதாவை விட்டு ஏன் சென்றார் என்று மக்கள் என்னை கேட்கிறார்கள். குரு ஜெயப்பிரகாஷ் நாராயணன், சமூக சீர்திருத்தவாதி ராம் மனோகர் லோஹியாவை யார் முதுகில் குத்துகிறார்களோ, அவர்கள்தான் நீண்ட கால நண்பர்களாகிய பாரதீய ஜனதாவை விட்டு எளிதில் செல்ல முடியும்.
முதல் மந்திரி நிதிஷ் குமார் ஒரு சந்தர்ப்பவாதி. அவர் பீகார் மக்களை காட்டிக்கொடுத்து விட்டார். இவர்கள் காங்கிரசுடன் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
1999-ம் ஆண்டு அதிகப்படியான எம்.எல்.ஏ.-க்கள் எங்களுக்கு இருந்தும் நிதிஷ்குமார் தலைமையை ஏற்க எங்களது கட்சி முதலமைச்சர் பதவியையே தியாகம் செய்தது. அப்போது நிதிஷ் குமாரின் தலைமையை பாரதீய ஜனதா ஏற்றது.
பீகார் மக்களின் நலனுக்காவும் தேசிய ஜனநாயக கூட்டணிக்காகவும் பல்வேறு தியாகங்களை செய்து ஐக்கிய ஜனதா தளத்துடன் பாரதீய ஜனதா இணைந்தே செயல்பட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
...
shared via
Saturday, October 26, 2013
விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: ராஜஸ்தான் கூட்டத்தில் மோடி தாக்கு Central Government did not take steps to control price rise Modi talk in Rajasthan
விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: ராஜஸ்தான் கூட்டத்தில் மோடி தாக்கு Central Government did not take steps to control price rise Modi talk in Rajasthan
உதய்பூர், அக். 26-
ராஜஸ்தான் மாநிலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் உதய்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. வாஜ்பாய் ஆட்சியின்போது டீசல் விலை 22 ரூபாயாக இருந்தது. இப்போது 60 ரூபாயைத் தாண்டிவிட்டது. 100 நாட்களில் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதாக கூறினார்கள். பணவீக்கம் விஷயத்தில் நடந்தது என்ன? என்பதை அவர்கள் தெரிவிக்க வேண்டும்.
வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வெங்காய உற்பத்தியில் வெறும் 5 சதவீதம் தான் பற்றாக்குறை உள்ளது. ஆனால் விலையோ 1500 சதவீதம் உயர்ந்திருக்கிறது. விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
காங்கிரஸ் கட்சி, மக்கள் நலத்திட்டங்களைப் பற்றி பேசுவதற்குப் பதிலாக, குடும்ப நாடங்களை ஓட்டிக்கொண்டிருக்கிறது. குடும்ப நாடகங்கள் இந்திய குடும்பங்களில் மிகவும் பிரபலம்.
காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக வழக்குகள் உள்ளன. ஆனால் அந்த விஷயத்தில் சி.பி.ஐ. மவுனமாக இருக்கிறது. ஆனால் பா.ஜனதா கட்சியின் வசுந்தரா ராஜே, ராமன் சிங், சிவராஜ் சிங் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தபோது சி.பி.ஐ. இப்படி மவுனமாக இருக்கவில்லை. அரசியல் நோக்கங்களுக்காக சி.பி.ஐ. பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
...
shared via
திருட்டு பைக்கில் ராஜஸ்தானை சுற்றி வந்த ராகுல் காந்தி: மோடி கடும் தாக்கு modi alleges rahul strolled on stolen bike in rajasthan
திருட்டு பைக்கில் ராஜஸ்தானை சுற்றி வந்த ராகுல் காந்தி: மோடி கடும் தாக்கு modi alleges rahul strolled on stolen bike in rajasthan
ஜெய்பூர், அக். 27-
பிரதமர் பதவிக்கான பா.ஜ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி நாடெங்கிலும் சுற்றுப் பயணம் செய்து மக்களின் ஆதரவை திரட்டி வருகிறார்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மோடி பேசியதாவது:-
ராஜஸ்தானின் மந்திரியாக பதவி வகித்த பாபுலால் நாகர் மீதே கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. எந்த பெண்ணாவது தனியாக சென்று ராஜஸ்தான் மந்திரிகளை சந்தித்து தங்களின் புகார்களை அளிக்க முன்வருவார்களா? பெண்களின் கண்ணியம் இங்கு மதிக்கப்படுவது இல்லை.
முதல் மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு ராஜஸ்தான் மாநிலத்தையே அழித்து விட்டது. இந்த காங்கிரஸ் அரசை மாநிலத்தை (ராஜஸ்தான்) விட்டே தூக்கி எறிந்தால் இந்தியாவின் முகமாக ராஜஸ்தான் மாறிவிடும்.
ராகுல் காந்தி தனது பாட்டி மற்றும் அப்பா படுகொலை செய்யப்பட்டதாக கதைகளை சொல்லி குடும்ப சீரியல்களை பொதுகூட்டக் மேடைகளில் நடத்தி வருகிறார்.
கோபால்கர் கலவரத்தில் 10 உயிர்கள் பலியானதால் தனது கட்சியின் முதல் மந்திரி வேட்பாளர் அசோக் கெலாட்டை கூட நம்பாமல் யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக ராகுல் காந்தி ஒரு பைக்கின் பின்னால் அமர்ந்தபடி கோபால்கர் பகுதியை சுற்றி வந்தார்.
அந்த பைக்கை ஓட்டியது யார்? அந்த பைக் யாருடையது? என்பது உங்களுக்கு தெரியும். அது காணாமல் போனதாக கூறப்பட்ட ஒரு திருட்டு பைக்.
தேர்தல் நெருங்கி விட்டதால் பா.ஜ.க. தலைவர்கள் குலாப் ரத்தோர் ஆகியோர் மீது சி.பி.ஐ.யை ஏவிவிட்ட காங்கிரஸ் கட்சியின் ராஜஸ்தான் மாநில ஆட்சி தற்போது முன்னாள் முதல் மந்திரி வசுந்தரா ராஜேவையும் பழி வாங்க நினைக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
...
shared via
ஐ.எஸ்.ஐ.யிடம் தொடர்பில் உள்ள முஸ்லிம்கள் பெயரை வெளியிட தயாரா? ராகுல் காந்திக்கு மோடி சவால் Modi challenge to Rahul ready to reveal the names of Muslim people involved to ISI
ஐ.எஸ்.ஐ.யிடம் தொடர்பில் உள்ள முஸ்லிம்கள் பெயரை வெளியிட தயாரா? ராகுல் காந்திக்கு மோடி சவால் Modi challenge to Rahul ready to reveal the names of Muslim people involved to ISI
ஜான்சி, அக். 26–
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்திக்கு சரமாரியாக கேள்வி எழுப்பி சவால் விட்டார். அவரது பேச்சு விவரம் வருமாறு:–
ரெயில் நிலையத்தில் டீ விற்று வாழ்க்கையை தொடங்கிய என்னை பிரதமர் வேட்பாளராக பா.ஜ.க. அறிவித்துள்ளது. டெல்லியில் என்னை அமர வைத்தால் நமது நாட்டின் கருவூலத்துக்கு நான் காவலாளியாக இருப்பேன்.
காங்கிரஸ் ஆட்சிக்கு நீங்கள் 60 ஆண்டுகள் வாய்ப்பு கொடுத்தீர்கள். இதனால் அவர்கள் தங்களை மன்னர்கள் போல கருதி கொண்டிருக்கிறார்கள்.
பா.ஜ.க.வுக்கு 60 மாதங்கள் வாய்ப்பு தாருங்கள். இந்திய நாட்டை உலகமே வியக்கும் வகையில் மாற்றிக் காட்ட முடியும். மக்களின் கண்ணீருக்கும், கவலைகளுக்கும் பதில் சொல்லும் அரசாக பா.ஜ.க. அரசு திகழும்.
காங்கிரசின் இளவரசராக வலம் வருபவர் (ராகுல்) இந்தூர் பொதுக் கூட்டத்தில் பேசியதை நான் படித்தேன். முசாபர் நகரில் உள்ள முஸ்லிம் இளைஞர்கள் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு வைத்திருப்பதாக அந்த இளவரசர் கூறி இருக்கிறார்.
அவருக்கு இந்த தகவலை உளவுத்துறை அதிகாரி சொன்னாராம். உளவு துறை அதிகாரி, அந்த தகவலை அந்த இளவரசரிடம் (ராகுல்) ஏன் சொன்னார் என்று தெரியவில்லை.
இளவரசர் சாதாரண எம்.பி. பதவி தான் வகித்து வருகிறார். அவரிடம் உளவுத்துறை அதிகாரி தகவலை பகிர்ந்து கொண்டது பற்றி விசாரணை நடத்த வேண்டும்.
முசாபர் நகர் முஸ்லிம் வாலிபர்கள் ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு வைத்திருப்பதாக கூறும் காங்கிரஸ் இளவரசர் அந்த வாலிபர்களின் பெயர்களை வெளியிட வேண்டும். இதற்கு அவர் தயாரா? என்று சவால் விடுகிறேன்.
ஒரு வேளை அவர் அந்த முஸ்லிம் வாலிபர்களின் பெயரை வெளியிடா விட்டால், ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் அவர் அவமதிப்பதாகத்தான் அர்த்தம். இதற்காக அந்த இளவரசர் நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்.
சில தினங்களுக்கு முன்பு அந்த இளவரசர் தன் பாட்டியை சுட்டுக் கொன்ற சோகக்கதையை சொல்லி அழுது இருக்கிறார். நான் இங்கு அழுவதற்கு வரவில்லை. உங்கள் கண்ணீரை துடைக்கவே வந்திருக்கிறேன்.
பாட்டியை கொன்றவர்கள் மீது 15 ஆண்டுகள் வரை கோபத்துடன் இருந்ததாக இளவரசர் கூறி இருக்கிறார். அந்த சம்பவத்துக்காக ஆயிரக்கணக்கான சீக்கியர்களை உங்கள் கட்சி கொன்றதே, அதற்காக இதுவரை ஒருவருக்கு கூட தண்டனை அளிக்கப்படவில்லையே.
கொல்லப்பட்ட சீக்கியர்களுக்காக நீங்கள் வருத்தமோ, கோபமோபட்டதுண்டா? காயம் மீது உப்பு தடவும் வேலையை இளவரசர் கைவிட வேண்டும்.
பந்தல்கண்ட் விவசாயிகளுக்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதியை மத்திய பிரதேச முதல்–மந்திரி சிவராஜ்சிங் சவுகான் சரியாக பயன்படுத்தி இருக்கிறார். ஆனால் உத்தரபிரதேச அரசியல்வாதிகள் அந்த பணத்தை கொள்ளையடித்து தங்கள் பைகளில் போட்டு விட்டனர்.
காங்கிரஸ் இளவரசர் ஏழைகளின் வீடுகளுக்கு அடிக்கடி செல்கிறார். அவர் கட்சி கொடுத்துள்ள பரிசு இந்த ஏழ்மைதான்.
உத்தரபிரதேசத்தில் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் நடமாடுவதாக காங்கிரஸ் இளவரசர் சொல்கிறார். அப்படியானால் அவர் கட்சி என்ன செய்து கொண்டிருக்கிறது. இதற்கு காங்கிரஸ் விளக்கம் அளிக்க வேண்டும்.
ரகசியங்களை வெளியில் சொல்ல மாட்டேன் என்று பதவி ஏற்கும் போது உறுதி மொழி கொடுப்பார்கள். இதுவெல்லாம் காங்கிரஸ் இளவரசருக்கு தெரியுமா? அவர் ரகசிய காப்பு உறுதிமொழி எடுக்கவில்லையா?
உத்தரபிரதேசத்தில் ஏராளமான வளம் உள்ளது. நீங்கள் நினைத்தால் ஒட்டு மொத்த இந்தியாவின் வறுமையை ஒழிக்க முடியும்.
காங்கிரஸ் அதை செய்யாமல் பேக்கேஜ் என்ற பெயரில் திட்டங்களை அறிவிக்கிறது. காங்கிரசை நீங்கள் பேக்கிங் செய்யும் காலம் வந்து விட்டது.
இவ்வாறு மோடி பேசினார்.
...
shared via
Friday, October 25, 2013
நாட்டின் கஜானாவில் யாரும் கைவைக்க முடியாதபடி காவல் காப்பேன்: மோடி பேச்சு modi says will safe guard countrys treassury as watch man
நாட்டின் கஜானாவில் யாரும் கைவைக்க முடியாதபடி காவல் காப்பேன்: மோடி பேச்சு modi says will safe guard countrys treassury as watch man
லக்னோ, அக். 26-
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக் கூட்டத்தில் குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி பேசியதாவது:-
பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையிலும் ஊழலுக்கு எதிராக என்ன செய்ய போகிறோம்? என்று பேச காங்கிரஸ் கட்சி மறுத்து வருகிறது. பணவீக்கம், விலைவாசி உயர்வு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாகவும் பதில் அளிக்காமல் அவர்கள் மவுனம் சாதிக்கின்றனர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு மக்களுக்கு பதில் அளிக்க வேண்டாமா? ஆனால், தங்களை இந்த நாட்டின் ராஜாக்களாகவும் இளவரசர்களாகவும் கருதிக் கொண்டிருப்பவர்கள் பதில் அளிக்க விரும்பவில்லை.
மக்களாகிய நீங்கள் காங்கிரஸ் கட்சிக்கு 60 ஆண்டுகள் ஆட்சி செய்யும் பொறுப்பை தந்தீர்கள். எங்களுக்கு 60 மாதங்களை தாருங்கள்.
ஒரு காலத்தில் ரெயில்களில் டீ விற்ற என்னை பிரதமர் பதவிக்குரிய வேட்பாளராக பா.ஜ.க. அறிவித்துள்ளது.
என்னை நீங்கள் பிரதமராக்க வேண்டாம். இந்த நாட்டின் காவல்காரனாக (வாட்ச் மேன்) மட்டும் நியமித்தால் போதும். உங்கள் காவல்காரனாக டெல்லியில் அமர்ந்து நாட்டின் கஜானாவில் யாரும் கைவைக்க முடியாதபடி நான் காவல் காப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
...
shared via
என் பாட்டி, என் அப்பாவை கொன்றது போல என்னையும் கொல்வர்-ராகுல் They killed my grandmother, father; will kill me too: Rahul
என் பாட்டி, என் அப்பாவை கொன்றது போல என்னையும் கொல்வர்-ராகுல்
They killed my grandmother, father; will kill me too: Rahul
இப்புடி குழந்தை பலூனை உடைச்சுட்டா அழற மாதிரியா அழறது?!!!இப்படி அபிஷ்டு மாதிரியாங்க பேசறது? ஒருவேளை நீங்க பிஎம் ஆகிட்டா , எங்களுக்கு வாழ்க்கை மேலேயே விரக்தி வந்துடும்,அது தான் எங்களுக்கு வாழ்க்கையின் மீதான நம்பிக்கையே பொய்க்கும் இடம், பாத்துக்கங்க.
உங்க பாட்டி எமர்ஜென்சியில் விதைத்ததை சீக்கியரிடம் அறுத்தார் என்றால் மிகையில்லை,19 மாத கால கொடிய எமர்ஜென்சியில் நீங்கள் , உங்கள் புனித பசு பிம்பம் கொண்ட குடும்பம் எல்லாம் எத்தனை சொகுசாக இருந்திருப்பீர்கள் என யாருக்கும் சொல்ல வேண்டியதில்லை.
அதே எமர்ஜென்சி சமயத்தில் உங்கள் கைப்பாவை போலீஸார் & மிலிட்டரியால் நாடெங்கிலும் சந்தேகத்துக்கு இடமாக கைது செய்யப்பட்டு ,கோர்ட் விசாரணையே இன்றி சுட்டுக் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான நபர்கள், லாக்கப் டெத் செய்யப்பட்ட எதிர்கட்சியினர், நியாயம் கேட்ட படித்த,பாமர மக்களில் காலையில் வேலைக்கு போய் வீடு திரும்பாதோர், கட்டாய குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்ட லட்சக்கணக்கான ஆண்கள், பெண்கள், அதில் மணமே ஆகியிராத ஆண்கள், பெண்கள்,அது உங்களுக்கு மறந்துவிட்டதா?!!!
காங்கிரஸ் ஆண்ட போபாலில் விஷவாயு கசிவினால் ஒரே இரவில் தூக்கத்திலேயே மாண்டோர்கும்,சிதைக்கப்பட்ட டிஎன்ஏ உடற்கூறுகளுடன் இன்றும் மாண்டு கொண்டிருப்போர்க்கும் நீங்கள்,உங்கள் காங்கிரஸ்,என்ன நீதி செய்தீர்கள்?
இப்படி நீங்கள் செய்த அக்கிரமம் ஒன்றா இரண்டா?!!!தெய்வம் நின்று கொல்லும் என்பது சத்தியம், அப்படித் தான் எமர்ஜென்சியில் குரூர ஆட்டம் ஆடிய உங்கள் சித்தப்பா ,தன் மகன் பிறந்த 100வது நாளில் பயிற்சி விமான விபத்தில் இறந்ததும்!!! . போகும் போது கூட உடன் ஒருவரை அழைத்து போனார் புண்ணியவான். அது மறந்துவிட்டதா?!!!
இந்திரா அம்மையாரை இரண்டு சீக்கியர்கள் கொன்றனர்,அதற்கு பரிகாரமாக 8000 [டெல்லியில் மட்டும் 3000 பேர்][அரசு சொன்ன கணக்கு] சீக்கியரை ஆண் பெண்,குழந்தைகள்,பிறந்த சிசு என பேதமின்றி கொன்றார்களே உங்கள் திருத்தொண்டர்கள், அது மறந்துவிட்டதா?!!!
அந்த சீக்கியப் படுகொலைகளுக்கு சப்பை கட்டு கட்ட ஒரு பெரிய ஆல மரம் விழும் போது நிலம் அதிரவே செய்யும் என சொல்லிய பின்னர் அதற்கு பல திசைகளிலும் எதிர்ப்பு திரண்டு வரவே மன்னிப்பு கேட்டாரே உங்கள் தந்தை ராஜிவ். அது மறந்துவிட்டதா?!!!
எல்லாவற்றிற்கும் மேலாக இலங்கை ராணுவத்துக்கும் புலிகளுக்கும் மத்தியஸ்தம் செய்ய உங்கள் தந்தை ராஜீவ் காந்தி அனுப்பிய அமைதிப்படையை யாராலுமே மறக்க முடியாது, 3 வருட அட்டூழியத்துக்கு பின்னர் அமைதிப் படையை வெளியேற்ற புலிகளும்,அவர்கள் எதிரிகளான சிங்கள ராணுவமும் ஒன்றாய் இணைந்து பட்ட பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல,அது ஆப்பரேஷன் பூமாலை அல்ல ஆப்பரேஷன் சவமாலை,
உலக அரங்கில் அமைதியை திரும்ப வைத்தவர் என ராஜீவின் புகழை பரைசாற்றும் அற்ப சுயநலத்துக்காக,புற்றுநோய் கிருமி போல நாட்டையே சூறையாடிய கோரப்படை அது,ஆப்பரேஷன் பூமாலையின் அட்டூழியங்களால் மடிந்த உயிர்களுக்கும் ,வல்லுறவு செய்யப்பட்ட சகோதரிகளுக்கும்,அங்கே இன்றும் நடைபிணங்கள் போல வாழ்பவர்க்கும் நீங்கள் என்ன செய்தீர்கள் ராகுல்?,அந்த ரத்த வாடை காயும் முன்பு முள்ளிவாய்க்கால் சம்பவத்துக்கு துணை நின்று சுமார் மூன்று லட்சம் பேர் மடிய காரணமாக இருந்தீர்களே?!!!அது மறந்துவிட்டதா?!!! இன்னும் எழுதவே அயற்சியாக இருக்கிறது,ஊழல் செய்வதில் கின்னஸ் சாதனை புரிந்த கட்சி என்பது தான் உங்கள் சாதனையாக இருக்கிறது.
உங்களை விட மக்களாகிய எங்களுக்கு நிறைய வரலாறு தெரியும் ,அவை நீங்கா வடுக்களாக எங்கள் மனதில் இன்னும் உள்ளன. அதை நாங்கள் மறக்கப்போவதில்லை. உங்கள் குடும்பத்தைப் பற்றி தேடினாலே இணையம் நல்லதாக எதுவும் தருவதில்லை, அதற்கு முதலில் ஏதாவது வழி பாருங்கள்.அப்புறம் மரண பயம் கொள்ளலாம்.
அண்ணாத்தையின் மரணபயத்தை
shared via
Popular Posts
-
சென்னையில் 18–ந் தேதி பா.ஜனதா தலைமை அலுவலகத்துக்கு மோடி வருகை narendramodi visit 18 on in chennai சென்னை, அக். 14– பா.ஜனதா பிரதமர் வேட்ப...
-
திருச்சியில் இளந்தாமரை மாநாடு இன்று நடக்கிறது: ராஜ்நாத்சிங் நரேந்திரமோடி பங்கேற்பு ilanthamarai Conference happening today திருச...
-
நரேந்திர மோடிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு: உளவுத்துறை எச்சரிக்கையால் நடவடிக்கை Warning intelligence to increase security by Narendra Modi பு...
-
வாரிசு அரசுகளை கைவிடுகிற போது ராகுலை இளவரசன் என்று அழைப்பதை நிறுத்துவேன்: மோடி Modi says Stop calling prince Rahul to abandoned heir governm...
-
நாட்டின் கஜானாவில் யாரும் கைவைக்க முடியாதபடி காவல் காப்பேன்: மோடி பேச்சு modi says will safe guard countrys treassury as watch man லக்னோ, ...
-
திருச்சியில் நரேந்திர மோடியை சந்திக்கிறார் ரஜினி? பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல்வருமான நரேந்திர மோடியை இன்...
-
நரேந்திரமோடி கூட்டத்துக்கு தடை இல்லை: ஐகோர்ட்டு உத்தரவு chennai high court order modi meeting not ban சென்னை, அக். 18– தமிழ்நாடு மக்கள் ...



















