Monday, October 14, 2013

மோடி சென்னை வருகைக்கு பின் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி modi visit chennai After political changes pon radhakrishnan interview

மோடி சென்னை வருகைக்கு பின் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி modi visit chennai After political changes pon radhakrishnan interview

கன்னியாகுமரி, அக். 15–

கன்னியாகுமரியில் பாரதீய ஜனதா மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

திருச்சியில் நடந்த இளம் தாமரை மாநாட்டில் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொண்ட பின்னர் பாரதீய ஜனதா வளர்ச்சி அதிகரித்து உள்ளது. அவர் மீண்டும் வருகிற 18–ந் தேதி சென்னை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்கிறார். அதன் பிறகு தமிழக அரசியலில் ஒட்டுமொத்த மாற்றம் ஏற்படும்.

தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா கட்சியுடன் பிற கட்சிகள் தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்வது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். இந்திய மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும். வலுவான, வலிமையான பிரதமர் அமையக் கூடிய வகையில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்களித்தால்தான் மீனவர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும்.

புத்தூரில் பயங்கரவாதிகள் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினரை பாரதீய ஜனதா முழுமையான மனதுடன் பாராட்டுகிறது. ஆனால் இந்த நடவடிக்கையினை தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் பாராட்டாதது துரதிஷ்டவசமானது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து காவல் துறையினருக்கும் ஒருபடி பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் அவர்களுக்கு இருபடி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று பாரதீய ஜனதா தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

மேலும் புத்தூர் சம்பவத்தில் மட்டுமின்றி பயங்கரவாதிகளை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தமிழக காவல்துறையில் உள்ள மற்ற அதிகாரிகள், உளவுதுறை அதிகாரிகள் அனைவருக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும்.

இப்போது கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதிகள் எண்ணிக்கை வெறும் கடுகளவு தான். இன்னும் நிறைய பயங்கரவாதிகள் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதாக அவர்களே சொல்லி வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு பயங்கரவாதிகளை ஒடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது பாரதீய ஜனதா மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி, முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

...

shared via

Modi talks of national ambition in global address

The U.S. government may have denied a visa to him, but Gujarat Chief Minister and BJP's Prime Ministerial candidate Narendra Modi continues to address global audiences.

On Monday, Mr. Modi addressed the Global Meet of Emerging Markets Forum in Washington through video conferencing, delivering his refrain on "Effective Governance: Getting results in a democracy."

Gujarat success

It may have been a global meet, but the Chief Minister spoke largely on his national ambition through the prism of his own avowed success story of Gujarat, promising that he could do to the country what he did to his home State.

"Those in the government have to understand that people's good is the biggest agenda. Governments are guardians of people's interests," Mr. Modi said.

"Humility is important and governments must accept the collective wisdom of the people. People are ready to listen for development."

'Bitter pills swallowed for greater good'

He added: "People are ready for bitter pills. The only assurance they want is what is being done is for a greater good."

Mr. Modi said that when he took over as Chief Minister, the energy sector was in a bad shape but he called in farmers and told them they needed was more water, and not electricity.

"I appealed to them for water conservation through micro irrigation. The government and the people worked together and we did plenty of work in water harvesting," he said, adding that groundwater tables had risen in the State while expenses of farmers had come down.

The Chief Minister said Gujarat had never been an agricultural State but with the slogan of 'per drop more crop', the average annual agricultural growth rate in the State had gone up to 10 per cent.

மோடியின் கான்பூர் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள மத்திய மந்திரிக்கு அழைப்பு Jaiswal and Oppn leaders invited for Modi Kanpur rally

மோடியின் கான்பூர் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள மத்திய மந்திரிக்கு அழைப்பு Jaiswal and Oppn leaders invited for Modi Kanpur rally

கான்பூர், அக். 14-

உத்தரப் பிரதேசத்தில் உள்ள கான்பூரில் வரும் 19-ம் தேதி நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசுகிறார். பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங், மதத் தலைவர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள கான்பூர் தொகுதியின் எம்.பி.யும், மத்திய அமைச்சருமான ஸ்ரீபிரகாஷ் ஜெய்சுவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கான்பூர் மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் சுரேந்திர மைதினி கூறியதாவது:-

இக்கூட்டத்திற்கு சாதி, மதம், கட்சிகள் வேறுபாடின்றி ஒரு லட்சம் பேருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.  கான்பூர் எம்.பி.யும் மத்திய மந்திரியுமான ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், சமாஜ்வாடி கட்சியின் தலைவர்கள், மந்திரிகள், எம்.எல்.ஏ.-க்கள் மற்றும் எதிர்க்கட்சியினருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

நல்ல எண்ண அடிப்படையில் இவர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்ப வேண்டியது எங்கள் கடமை. கூட்டத்திற்கு வருவது அவர்களின் விருப்பத்தை பொறுத்தது.

இவ்வாறு அவர் கூறினார். 

...

shared via

சென்னையில் 18–ந் தேதி பா.ஜனதா தலைமை அலுவலகத்துக்கு மோடி வருகை narendramodi visit 18 on in chennai

சென்னையில் 18–ந் தேதி பா.ஜனதா தலைமை அலுவலகத்துக்கு மோடி வருகை narendramodi visit 18 on in chennai

சென்னை, அக். 14–

பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வருகிற 18–ந் தேதி சென்னை வருகிறார். அன்று மாலை 6 மணிக்கு சென்னை பல்கலைக்கழக மண்டபத்தில் நடைபெறும் நானிபல்கிவாலா அறக்கட்டளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

இதற்காக தனி விமானத்தில் அகமதாபாத்தில் இருந்து சென்னை வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு கொடுக்க பா.ஜனதா கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளார்கள்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட சில மாவட்டங்களில் இருந்து 10 ஆயிரம் தொண்டர்களை திரட்ட முடிவு செய்துள்ளார்கள். மதியம் 2 மணிக்கு விமான நிலையத்தில் வரவேற்பு கொடுக்கப்பட உள்ளது.

விமான நிலைய வரவேற்பு முடிந்ததும் தியாகராயநகர் வைத்தியராமன் தெருவில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான கமலாலயம் செல்கிறார். அங்கு நடை பெறும் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதில் கலந்து கொள்ளும்படி அனைத்து மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

நிர்வாகிகள் கூட்டத்தில் கூட்டணி நிலவரங்கள், கட்சி வளர்ச்சிக்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் உள்பட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக விவாதித்து முடிவெடுக்கிறார்கள்.

...

shared via

Popular Posts