Wednesday, October 23, 2013

BJP will do well in Delhi polls under Harsh Vardhan: Modi

BJP will do well in Delhi polls under Harsh Vardhan: Modi

Gujarat Chief Minister and BJP's prime ministerial candidate Narendra Modi on Wednesday expressed confidence that the party will do well in Delhi Assembly polls under the leadership of Harsh Vardhan.

"Congratulations to Dr. Harsh Vardhan on being named BJP's CM candidate for upcoming Delhi elections. My best wishes," Mr. Modi said on twitter.

"As Health Minister, his (Harsh Vardhan's) trend-setting polio eradication drive made Delhi polio-free & now I am sure he will free Delhi from misgovernance," he further said.

He further wrote that "under the leadership of Dr. Harsh Vardhan and Shri Vijay Goyal, I am confident BJP will do great in the Delhi Vidhan Sabha Elections."

The decision to declare Dr Harsh Vardhan as BJP's chief ministerial candidate for the December 4 Delhi Assembly elections was taken by the party's parliamentary board on Wednesday.

Mr. Modi was not present in the meeting but had given his consent for the name of Dr. Vardhan.

...

shared via

Tuesday, October 22, 2013

மோடி பிரதமராவதை யாராலும் தடுக்க முடியாது: சத்ருகன் சின்கா திடீர் பல்டி Satrughan Singha claims nobody can stop Modi becoming PM

மோடி பிரதமராவதை யாராலும் தடுக்க முடியாது: சத்ருகன் சின்கா திடீர் பல்டி Satrughan Singha claims nobody can stop Modi becoming PM

புதுடெல்லி, அக்.22-

மோடிக்கு உயர் பதவிகள் வழங்கப்படுவதை ஆரம்ப காலத்தில் அத்வானியுடன் சேர்ந்து எதிர்த்து வந்த பாலிவுட் நடிகரும் பா.ஜ.க. எம்.பி.யுமான சத்துருகன் சின்கா தற்போது மோடி பிரதமராவதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.

மோடி எதிர்ப்பு மனப்போக்கை கைவிட்டு தற்போது பா.ஜ.க.வின் மைய நீரோட்டத்தில் இணைந்துள்ள சத்ருகன் சின்கா, மோடியை பிரதமராக்குவது எனது கட்சி எனக்கு இட்டுள்ள கட்டளை அதை நான் எவ்வகையிலும் நிறைவேற்றியே தீருவேன்.

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.

பீகார் சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்கு மோடி போனால் அவர் மீது கோபத்தில் உள்ள முஸ்லிம் வாக்காளர்கள் பா.ஜ.க.வுக்கு எதிராக வாக்களித்து விடுவார்கள்.

அதனால் அவரை பீகார் பிரசாரத்திற்கு அனுப்பக் கூடாது என்று முன்னர் கருத்து தெரிவித்த சத்ருகன் சின்கா, பீகாரில் நடைபெறும் நிதிஷ் குமாரின் ஆட்சிக்கு பாராட்டு பத்திரம் வாசித்ததும், இந்தியாவை ஆளக்கூடிய தகுதி படைத்தவர் நிதிஷ் குமார் என வானளாவ புகழ்ந்ததும் நினைவிருக்கலாம்.

...

shared via

பாராளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்க பொதுமக்களின் கருத்துகளை திரட்டும் நரேந்திர மோடி Modi seeking peoples idea for poll manifesto

பாராளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்க பொதுமக்களின் கருத்துகளை திரட்டும் நரேந்திர மோடி Modi seeking peoples idea for poll manifesto

புதுடெல்லி, அக்.23-

இணையதளம், சமூகவலைத்தளம் ஆகியவற்றின் மூலம் இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகளில் உள்ள மக்களிடம் இடைவெளியற்ற தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளவர் குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி.

பா.ஜ.க.வின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக இவரது பெயர் அறிவிக்கப்பட்ட பிறகு தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் மோடி பேசும் பொதுக்கூட்டங்களில் ஏராளமான மக்கள் குவிவதாக ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.

இந்நிலையில், பா.ஜ.க. வெளியிடவுள்ள பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்பவை தொடர்பான பொதுமக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்கும் வகையில் மோடியின் டுவிட்டர் பக்கம் வாயிலாக தனி இணைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இணைப்புக்குள் சென்று தேர்தல் அறிக்கை எவ்வாறு அமைய வேண்டும் என்று பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என மோடி டுவீட் செய்துள்ளார்.

உங்கள் குரல் - உங்கள் தேர்தல் அறிக்கை என்றும் மோடி தெரிவித்துள்ளார்.

...

shared via

Monday, October 21, 2013

மோடியை பிரதமராக்கினால் ஊழலற்ற ஆட்சி நடத்துவார்: பொன் ராதாகிருஷ்ணன் பேச்சு modi prime minister not bribe regime pon radhakrishnan speech in kanyakumari

மோடியை பிரதமராக்கினால் ஊழலற்ற ஆட்சி நடத்துவார்: பொன் ராதாகிருஷ்ணன் பேச்சு modi prime minister not bribe regime pon radhakrishnan speech in kanyakumari

கன்னியாகுமரி, அக். 21–

கன்னியாகுமரி தெற்கு ரத வீதியில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய பாரதீய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் மகேஷ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்கள் முடிசூடும் பெருமாள், ரத்தினசாமி, கன்னியாகுமரி பேரூர் பாரதீய ஜனதா தலைவர் தங்கத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய வர்த்தகப்பிரிவு தலைவர் சுடலைமணி வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:–

மத்தியில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து துறைகளும் தோற்றுப் போய் உள்ளது. விலைவாசி உயர்ந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாத மந்திரிகளை காட்ட முடியாது. பிரதமர் முதல் பெரும்பாலான மந்திரிகள் ஊழலில் சிக்கி உள்ளனர். ஸ்பெக்டரம் ஊழலில் முன்னாள் மத்திய மந்திரி ராசா ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஸ்பெக்டரம் பிரச்சினையில் தொடர்புடைய பிரதமர் மற்றும் மத்திய மந்திரி ப. சிதம்பரத்தையும் சிறையில் அடைத்திருக்க வேண்டும்.

தற்போது நிலக்கரி ஊழல் நடந்துள்ளது. இதில் பிரதமர் குற்றவாளி என்று அந்த துறை செயலாளரே கூறி உள்ளார். ஆனால் மத்திய அரசு அது தொடர்பான ஆவணங்களை களவு செய்து விட்டது.

அதே சமயம் பாரதீய ஜனதா ஆட்சி வாஜ்பாய் தலைமையில் நடந்தபோது விலைவாசி உயர்வு கட்டுப் படுத்தப்பட்டது. அணுகுண்டு சோதனை நடத்தி உலகளவில் இந்தியா சாதனை படைத்தது. அமெரிக்கா, ஜப்பான் எச்சரிக்கையை மீறி இந்த சாதனையை வாஜ்பாய் அரசு படைத்தது.

மேலும் அமெரிக்கா, ஜப்பான், சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் நமது நட்பு பலமாக விளங்கியது. கன்னியாகுமரி–காஷ்மீர் தங்க நாற்கர சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது போக்குவரத்து சீர் அடைந்து நாடு முன்னேற்றம் அடைகிறது.

ஊழல்களின் மொத்த உருவமாக மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு உள்ளது. நரேந்திரமோடியை பிரதமராக்கினால் ஊழல் அற்ற நல்ல ஆட்சியை கொடுப்பார். விலைவாசி உயர்வு கட்டுப் படுத்தப்படும். குஜராத்தை இந்தியாவில் முதல் மாநில மாக்கியது போல் இந்தியாவை உலக வல்லரசு நாடாக முதன்மை நாடாக மாற்றுவார்.

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் மத்திய அரசு பங்கேற்கும் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும். பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தால் கச்சத் தீவை மீட்க நரேந்திரமோடி நடவடிக்கை எடுப்பார்.

இவ்வாறு அவர் பேசினார்.

...

shared via

Popular Posts